Tuesday, May 19, 2009

நாய்க்குட்டி பொம்மை

-----------------------------
அலமாரியில்

அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து

தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி

அமர்ந்து கொள்கிறது

அந்த நாய்க்குட்டி பொம்மை .

உணவு மேசையை நோக்கி

உணவு மேசையின் மேலிருக்கும்

வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட

ரொட்டித் துண்டுகளை நோக்கி

மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது

அந்த நாய்க்குட்டி பொம்மை .

அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்

விளையாடிக்கொண்டே இருந்துவிட்டு

அப்படியே தூங்கி விட்டது .

குழந்தை

காலையில் எழுந்து பார்த்தேன் .

குழந்தையின் முதுகிற்கு அடியில்

நசுங்கிக் கிடந்தது பொம்மை .

பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .

சிறகுகள் .

--------------
மனதின் சரிவுகளில்

எண்ணிலடங்கா பறவைகள்

நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது

பருத்த ஆலமரமொன்று

கண்களில் உப்பு நீர் சுனை .

மனதின் புற வெளியில்

எல்லையில்லா வானம்

எப்போதாவது தூரத்தில்

நீ தெரியும் வேளை

சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு

பறக்கத் துவங்குகின்றன .

ஆயிரமாயிரம் பறவைகள்

வானம் முழுக்க சிறகுகள் .

உயிரோசை இதழ் -38 (18-05-2009)

Sunday, May 10, 2009

நான்