Thursday, January 22, 2009

அ-கடிதங்கள்


அ-கடிதங்கள்

-----------------

இலக்கமற்ற வீட்டிற்கு

நிறையகடிதங்கள்வந்துசேர்கின்றன.

காகிதமற்று,உறைகளற்று,

எழுத்துகளற்று,வார்த்தைகளற்ற

அ- கடிதங்களை

உருவமற்ற ஒருவன் / ள்

வாசிக்கிறான் / ள்.

பின்னவற்றை வேலைப்பாடு மிகுந்த

காற்றில் பின்னப்பட்ட பையொன்றில்

சேகரித்தபடி இருக்கிறான் / ள்

காலத்திற்கும் .

puthiyaparvai -dec2008

No comments: