Saturday, June 20, 2009

நீ வந்து விட்டாய்


நீ வந்து விட்டாய்


யாவும் பாதியிலேயே

நிறுத்தப்பட்டு விட்டன .


விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று

விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று

குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று

விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று


நீ வந்து விட்டாய்.


யாவும் ஆறிவிட்டன .

யாவும் துண்டிக்கப்பட்டன .

யாவும் உலர்ந்து விட்டன .

யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .


நீ வந்து விட்டாய் .

நான் செய்துகொள்ளவிருந்த

தற்கொலையும் பாதியிலேயே .

(uyirosai)

No comments: