Thursday, February 23, 2012

கரைந்த பொழுதுகளில் .....

இரவுக்கும் இருட்டுகுமான
இடைவெளியில் நான்
என்னைக்காண எத்தனிக்கையில்
சந்திரன் தன் முகத்தை
பெருவெளியில் புதைத்துக்கொள்ள
என் உடல் கடத்தும் தெரிவின்றி
நான் வளர தெரியாமலே
கரைந்து போனேன்
பேர் இருளாய்
கரைந்த பொழுதுகளில்
ஒற்றை காலில் நின்றது
ஆங்கோர் கரும் கொக்கு
பின் வந்த கடும் பொழுதுகளில்
அதன் அடுத்த காலும் கரைந்து போக
ஒற்றை காலுமின்றி
ரெக்கை விரித்தது கரும் கொக்கு
பறக்க துவங்கிய அந்த பொழுதில்
பல கால்களாய் விரிந்தது
அதன் மென் சிறகுகள்

No comments: