தவறாய் வலப்புறம்
------------
ருத்ரமுர்த்தியின்
அர்த்தநாரி பிரதியை
கோடானுகோடி ஆண்டுக்கு முன்
பிழையாக வடிவித்து விட்டான்
தேவதச்சன் .
வலப்புறம் சிவனும்
இடப்புறம் உமையுமாய்
காலம் காலமாய்
வலப்புறம் கர்ப்பப்பையை
தாங்கிக்கொண்டிருக்கிறார்
ருத்ரமுர்த்தி
------
எனது உறுப்பானது எனது எண்ணம்.
----------
எனது உறுப்பாகவே மாறி இருந்தது
எனது எண்ணங்கள்
அதை அறுத்து விட எத்தனிக்கிறேன்
எனக்கும் என் எண்ணத்திற்கும்மிடையே சென்று
என் உறுப்பாகவே மாறிப்போன
என் எண்ணங்களை அறுத்தெறிய
தயக்கமில்லை இனி ஏதும்
ரத்தமின்றி அறுத்தெறிந்த
என் நினைவுருப்பு
மீண்டும்
மாமலையாய் வளருகிறது ..
---------------------------------
Sunday, April 15, 2012
Thursday, February 23, 2012
கரைந்த பொழுதுகளில் .....
இரவுக்கும் இருட்டுகுமான
இடைவெளியில் நான்
என்னைக்காண எத்தனிக்கையில்
சந்திரன் தன் முகத்தை
பெருவெளியில் புதைத்துக்கொள்ள
என் உடல் கடத்தும் தெரிவின்றி
நான் வளர தெரியாமலே
கரைந்து போனேன்
பேர் இருளாய்
கரைந்த பொழுதுகளில்
ஒற்றை காலில் நின்றது
ஆங்கோர் கரும் கொக்கு
பின் வந்த கடும் பொழுதுகளில்
அதன் அடுத்த காலும் கரைந்து போக
ஒற்றை காலுமின்றி
ரெக்கை விரித்தது கரும் கொக்கு
பறக்க துவங்கிய அந்த பொழுதில்
பல கால்களாய் விரிந்தது
அதன் மென் சிறகுகள்
இடைவெளியில் நான்
என்னைக்காண எத்தனிக்கையில்
சந்திரன் தன் முகத்தை
பெருவெளியில் புதைத்துக்கொள்ள
என் உடல் கடத்தும் தெரிவின்றி
நான் வளர தெரியாமலே
கரைந்து போனேன்
பேர் இருளாய்
கரைந்த பொழுதுகளில்
ஒற்றை காலில் நின்றது
ஆங்கோர் கரும் கொக்கு
பின் வந்த கடும் பொழுதுகளில்
அதன் அடுத்த காலும் கரைந்து போக
ஒற்றை காலுமின்றி
ரெக்கை விரித்தது கரும் கொக்கு
பறக்க துவங்கிய அந்த பொழுதில்
பல கால்களாய் விரிந்தது
அதன் மென் சிறகுகள்
Sunday, February 12, 2012
தொல் மரபி
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.
இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே
உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..
யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...
அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..
இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.
உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்
இவ்வுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
இன்பா சுப்ரமணியன்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.
இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே
உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..
யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...
அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..
இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.
உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்
இவ்வுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
இன்பா சுப்ரமணியன்
Friday, January 27, 2012
இசை நேரம்
காலையில் வரும் ஆதவன் பல முக மூடிகளை எனக்கு பரிசளிக்கிறார் தினமும்.. ஒவ்வொரு வேலைக்கும், இடத்திற்கும் தகுந்தார் போல முகமூடிகள்.. மாலை விடைபெறும் பகலவன், எனது முகமூடிகளையும் திரும்ப பெற்று சென்றுவிடுவார் ..
மாலை நேரம் என்னைக்கடத்த, முன் இரவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சுட்டிகள் குரல் பிடித்து நான் என்னைக்கடத்த , இரவுக்கும் இருட்டுக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில என் காதுகளுக்குள் ஒலிக்க துவங்கும் பண்பலையின் பாடல்கள்... பகலில் பாட்டு கேட்க்க முடியா சூழல்.. இரவில் காதிற்குள் புகுந்துவிடும் ஒயர் போன் ஒலிக்க துவங்கும் பாடல்ல்கள்..
அனைத்தும் முத்து பாடல்களாய், என முத்து முத்தாய் பேசும் அன்பான அருணுடன் துவங்கும்.....
நான் நீங்க இளையராஜா என்பார் செந்தில் காந்தமாக ..
உங்ககிட்ட பேசிட்டிருப்பது உங்கள் காதல் டாக்டர் என்று சிரிப்பை பூசிய வார்த்தைகளை கொண்டு கொண்டாடுவார் சிவசங்கரி..
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கும் எத்தனிப்புடன் மென்சிறகாய் வருடுவார் யாழ் சுதாகர்ர்ர் .... அடுத்து மனசுக்கு பக்கத்தில் அமர்ந்து தமிழை தேனில் குழைத்து பேசுவார் நம் ராஜசேகர் ....
பாடல்களின் இனிமை, சோகம், காதல், நட்ட்ப்பு, இயற்க்கை என விரியும் அந்த இரவு நேரம், அன்னத்தின் மென் சிறகுகள் கொண்டு வருடப்படும்.. வார்த்தைகள் மருதாணி பூசிக்கொள்ளும்..மேகங்கள் சாம்பிராணி சுமக்கும்..
உங்க போன எடுங்க சி எச் ன்னு டைப் பண்ணுங்க.. இடைவெளி விடுங்க ..உங்க பேர டைப் பண்ணுங்க... உங்க கருத்துக்கள எட்டு அஞ்சு எட்டு அஞ்சு நாலுக்கு குட்டி குட்டி வார்த்தைகளாய் டைப் பண்ணி அனுப்புங்க ன்னு ராஜசேகர் சொல்லும்போது அந்த எட்டும் அஞ்சும் கூட எவ்ளோ அழகுன்னு தோணும்..
உங்களுக்கான இரண்டு அழகான பாடல்களை கொடுத்து விட்டு நான் கேளம்புறேன்னு ராஜசேகர் கிளம்ம்பிய பின்னர் why this kolai veri kolai veri di? rytham change maame ... papaapaa என்று தமிழை பேசு தங்கலீஷில் தனுஷ் பாட, ப்பா .. தமிழ் எப்படி கலந்தாலும் அழகு குறையாத பன்னீர் சாரலாய் புதுப்பிக்கும்... இசைக்கு மொழி பேதமில்லை என்றாலும் ,நம் தமிழில் அதை கேட்கையில் ஒரு மமதை வருகிறது..
இந்த சந்தோஷமான அழகு நேரத்தில் எல்லாம் பிடிக்கிறது.. எல்லோரையும் பிடிக்க வைக்கிறது.. எல்லாமே ஆழ்ந்த காதலோடு தெரிகிறது..எங்கேயும் காதல்..எப்போதும் காதல்.. காதலாய் நான் ...
வலது புறமாய் படுத்து இயர் போனை வலது காதுகளுக்குள் வைத்ததால் வலது காதில் ஒலிக்கும் மது கலந்த போதை கொடுக்கும் தமிழின் இடது கரம் பற்றி நான் நடக்க எத்தனிக்கையில் எனது செவி மட்டும் உயிரோடு இருக்க ,எனது உடல் மறைந்து போக, இடது விழி கண்ணீர் வலது விழி புக, எனது பால்யம்,இடைக்காலம் ,இன்றைய நான் கரைந்து, எனது நினைவுகள் பர்வத மலையாய் வளர,என் தலை ஆகாயமாய் விரிந்து அண்டத்தில் நான் கரைய, எனது உயிர் வருடும் அந்த இசையுடன் இணைந்து என்னை கண்டுபிடித்து இசை போல உறங்கிய அந்த கணங்கள் உன்னதமாய் உயிர்வாழும் இன்பாவின் இசை நேரம்..... இனி என்றும் இசையோடு இசையாக இசை காதலாய் என் இனிய இன்பா :)
மாலை நேரம் என்னைக்கடத்த, முன் இரவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சுட்டிகள் குரல் பிடித்து நான் என்னைக்கடத்த , இரவுக்கும் இருட்டுக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில என் காதுகளுக்குள் ஒலிக்க துவங்கும் பண்பலையின் பாடல்கள்... பகலில் பாட்டு கேட்க்க முடியா சூழல்.. இரவில் காதிற்குள் புகுந்துவிடும் ஒயர் போன் ஒலிக்க துவங்கும் பாடல்ல்கள்..
அனைத்தும் முத்து பாடல்களாய், என முத்து முத்தாய் பேசும் அன்பான அருணுடன் துவங்கும்.....
நான் நீங்க இளையராஜா என்பார் செந்தில் காந்தமாக ..
உங்ககிட்ட பேசிட்டிருப்பது உங்கள் காதல் டாக்டர் என்று சிரிப்பை பூசிய வார்த்தைகளை கொண்டு கொண்டாடுவார் சிவசங்கரி..
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கும் எத்தனிப்புடன் மென்சிறகாய் வருடுவார் யாழ் சுதாகர்ர்ர் .... அடுத்து மனசுக்கு பக்கத்தில் அமர்ந்து தமிழை தேனில் குழைத்து பேசுவார் நம் ராஜசேகர் ....
பாடல்களின் இனிமை, சோகம், காதல், நட்ட்ப்பு, இயற்க்கை என விரியும் அந்த இரவு நேரம், அன்னத்தின் மென் சிறகுகள் கொண்டு வருடப்படும்.. வார்த்தைகள் மருதாணி பூசிக்கொள்ளும்..மேகங்கள் சாம்பிராணி சுமக்கும்..
உங்க போன எடுங்க சி எச் ன்னு டைப் பண்ணுங்க.. இடைவெளி விடுங்க ..உங்க பேர டைப் பண்ணுங்க... உங்க கருத்துக்கள எட்டு அஞ்சு எட்டு அஞ்சு நாலுக்கு குட்டி குட்டி வார்த்தைகளாய் டைப் பண்ணி அனுப்புங்க ன்னு ராஜசேகர் சொல்லும்போது அந்த எட்டும் அஞ்சும் கூட எவ்ளோ அழகுன்னு தோணும்..
உங்களுக்கான இரண்டு அழகான பாடல்களை கொடுத்து விட்டு நான் கேளம்புறேன்னு ராஜசேகர் கிளம்ம்பிய பின்னர் why this kolai veri kolai veri di? rytham change maame ... papaapaa என்று தமிழை பேசு தங்கலீஷில் தனுஷ் பாட, ப்பா .. தமிழ் எப்படி கலந்தாலும் அழகு குறையாத பன்னீர் சாரலாய் புதுப்பிக்கும்... இசைக்கு மொழி பேதமில்லை என்றாலும் ,நம் தமிழில் அதை கேட்கையில் ஒரு மமதை வருகிறது..
இந்த சந்தோஷமான அழகு நேரத்தில் எல்லாம் பிடிக்கிறது.. எல்லோரையும் பிடிக்க வைக்கிறது.. எல்லாமே ஆழ்ந்த காதலோடு தெரிகிறது..எங்கேயும் காதல்..எப்போதும் காதல்.. காதலாய் நான் ...
வலது புறமாய் படுத்து இயர் போனை வலது காதுகளுக்குள் வைத்ததால் வலது காதில் ஒலிக்கும் மது கலந்த போதை கொடுக்கும் தமிழின் இடது கரம் பற்றி நான் நடக்க எத்தனிக்கையில் எனது செவி மட்டும் உயிரோடு இருக்க ,எனது உடல் மறைந்து போக, இடது விழி கண்ணீர் வலது விழி புக, எனது பால்யம்,இடைக்காலம் ,இன்றைய நான் கரைந்து, எனது நினைவுகள் பர்வத மலையாய் வளர,என் தலை ஆகாயமாய் விரிந்து அண்டத்தில் நான் கரைய, எனது உயிர் வருடும் அந்த இசையுடன் இணைந்து என்னை கண்டுபிடித்து இசை போல உறங்கிய அந்த கணங்கள் உன்னதமாய் உயிர்வாழும் இன்பாவின் இசை நேரம்..... இனி என்றும் இசையோடு இசையாக இசை காதலாய் என் இனிய இன்பா :)
Thursday, January 19, 2012
எனக்குள் மீண்டும் நான் :

எனக்குள் மீண்டும் நான் :
சென்ற வருடம் ஜூன் மாதம் நடந்த ஒரு சின்ன விபத்தில் எனது வலது கை மணிக்கட்டு எலும்பு முறிவு என்று மருத்துவர் கூறியதில் ,என் வலது கை உபயோகம் வெகுவாக குறைந்ததில் எனது வலைத்தளம் என்னை போன்று தேங்கி விட்டது..
எப்போதும் எல்லா விடயங்களையும் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன்..பதிவு செய்யாத பலரை பதிவு செய்யச்சொல்லும் நான் பல விடயங்களை பதிவு செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல் போனது குறித்து நெருடல் இருந்தாலும், வருத்தமில்லை எனக்கு..
வலை தளங்களில் பதிவு செய்வது நம் கடமை..
ஒரு கை உடைந்ததாலே என் வலைத்தளம் தேங்கி விட்டது..
spider man கரம் உடைந்தால் எப்படி அவர் நியூ யார்க் நகர மக்களை காப்பாத்துவார்.???mashah allah..
கைகளால் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சுலபமாக செய்ய வழிவகுக்கும் விஞ்ஞானிகளுக்கு என் அன்பும் பாராட்டும்... எனை போன்ற எளியோர் உபயோகிக்கும் வகையில் ( அட , இப்படி டைப் அடிபதைதைத்தான் சொல்றேனுங்க.. மக்கள் எப்டி இவ்ளோ டைப் அடிச்சு தள்ராங்கோ?? ம்ம்மா ....)
சில சமயம் நிறைய பேசுவதும், பல சமயம் அதை சிலரிடம் பகிர்ந்து கொள்வதும் , ஒரு சிலரிடம் மட்டும் கலந்து பேசி சிரிப்பதும், ஒரு சிலரிடம் மட்டும் பேசி ஆதங்க படுவதும் ,ஒரு சில சமயம் நடக்கும் சில விடயங்கள் என் உணர்வுகளைச்சீண்டி விட ,அதற்காக என் கோவத்தை வெளிபடுத்துவதும், உற்ற நண்பர்களிடதே மட்டும் பல சமயம் பகிர்ந்து கொள்வது என்று இருப்பேன்.. பெரும்பாலான நேரம் மௌனமே எனக்குத்துணையாக இருக்கும்..
கோடை காலத்தில் உதிரும் வேப்பம்பூக்கள் போல நான் மிகவும் எளிமையானவள்.. நேசம் காட்டப்படும் இடங்களில் ஒரு வால் குழைத்த நாய் போன்று இருப்பேன்.. நேசம் ஒன்று மற்றுமே நிசமென்று நினைத்த நான் , அதில் உள்ள சாலக்கான வர்ணங்கள் கண்டு திகைத்து போனேன்..
கோவத்தின் நிறம்,காமத்தின் நிறம்,பாசத்தின் நிறம், போன்று பாசத்தின் போலி நிறம் கண்டு உணர்ந்து கொண்டேன்..
கொட்டுவது தேளின் சுபாவம்.. தேளை அடிப்பது வீரர்கள் வேலை.. ஓஓஓ ... எனக்கு கரப்பான் பூச்சி அடிக்கவே பயம்.. பிறகெங்கு நான் தேள் அடிப்பது?
நேரே நிற்கும் எதிரியை கையாள ஒரு திறமை இருத்தல் வேண்டும்.. மறைந்து நின்று தாக்கும் எதிரியை , அல்லது வஞ்சகமாக தாக்கும் நபர்களை அடையாளம் காண தனி திறமை வேண்டும்..
வாழ்வின் ஒவொரு நிமிடமும் கற்கும் நேரமே.. உண்மை.. நானும் அச்சரங்கள் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இனி எழுத்து கூட்டி படிக்கத்துவங்குவேன்..
ஒவொரு மனிதனும் ஒரு கட்டத்தில் வாசிக்கத்துவங்குவான்.. எனக்கு காலம், சட்டம், மருத்துவம், கோர்ட் ,கச்சேரி, போலீஸ் என பல நேரங்களில் பல விடயங்களை அதன் வர்ணகளோடு வாசிக்க கற்று கொடுத்துள்ளது.
நான் எனக்காக வாழ்ந்த நேரங்களை, எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கைக்காக என்று வாழ்ந்த நேரம் அதிகம்.. மனிதர்கள் முதல், கால்நடைகள் வரை அதில் அடக்கம்..
என்னோடு இருந்த அந்த ஐந்து அறிவு ஜீவன்கள் நாய் என்று அனைவரும் சொல்ல, என் அன்னையை காட்டிலும் ப்ரியம் காட்டிய சின்னு, புஜ்ஜி, சீனன் என்ற மூன்று ஜீவன்களின் நேசத்தில் , எத்தணை தரம் என்னை எவர் ஏமாற்றினாலும் , சின்னு, புஜ்ஜி, சீனன் காட்டிய அன்பின் வர்ணம் பூசி அண்டத்திற்கே அன்னையாய் வாழ எத்தனிக்கிறேன்..
எத்தணை மனிதர்கள், எத்தணை வர்ணங்கள் , எத்தணை விடயங்கள், எத்தணை அனுபவங்கள்...
ஒரு விடயம் கொடுத்த மகிழ்ச்சியில் சிரிப்பதற்குள் ஒரு அடி, ஒரு வலி, அதில் இருந்து மீண்டு எழுவதற்கு முன்னரே மேலும் ஒரு பூகம்பம், ஒரு சுனாமி,ஒரு அணு உலை உடைப்பு,உண்ணாவிரதம், யுத்தம், மரணம்,தூக்கு, விழாக்கள் ,பாராட்டு ,....உணர்வுகளின் வர்ணக்கலவை...
சில சமயம் எதை கடக்கிறேன் என்று புரியாமல் கடத்த படுகிறேன்.. இவை அனைத்தையும் புரிந்து கொண்டு நான் தெளிவாக ஒரு முடிவு எடுக்க , அல்லது, ஒரே வர்ணம் பூசி அலையை நினைப்பது என்பதை மிகக்கடினமாக உணர்கிறேன்..
எனது உறுப்பாகவே
மாறி இருந்தது எனது எண்ணங்கள்
அறுத்து எறிய எத்தனிக்கிறேன்
எனக்கும் என் நினைவுகளுக்கும் இடையேயான
எண்ண உறுப்புகளை அறுத்தெறிய
தயக்கமேதும் இல்லை இனி எனக்கு..
வாழ்க்கை மிகுந்த ஆழமாய் , வெறும் வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியா பள்ளமாய் தெரிகிறது.. இட்டு நிரப்ப வார்த்தைகளை தேடுவதை விட்டு , பள்ளத்தை நிரப்பும் எண்ணங்களை சேகரிக்கிறேன்..
கடினமான பிரயத்தனங்களை லகுவாக்கிவிடும் வித்தை நேசத்திற்கு மட்டுமே உண்டு .. இந்த வல்லமை உண்டு உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும்.
இப்படியான ஒரு எண்ணம் என்னிடத்தே தோன்றிய பொழுது எனக்குள் இருந்த நேசத்தின் வர்ணம் பூசிய மென்மையான என்னை எனக்குத்தெரிந்தது..
என் ஒரே நோக்கம் , அன்பு செய்வோம்..
மிகவும் குழப்பமாக பேசுகிறேன் என்று நினைப்பவர்களுக்கு என் நன்றி :)
நான் பைத்தியம் என்று உரைபவர்களை பற்றி கவலை பட நேரமில்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன்..
i just wish to cross the bridge as it comes...
என் முன் எனக்கு தென் பட்டு நான் கடப்பதை இனி பதிவு செய்வது என்பது என் இப்போதைய எண்ணம்.. அதன் வர்ணம் உணர்ந்து அதன் அடர்வு குறையாமல் என் வாழ்வின் மீது இறைவன் பூசியபடி இங்கு பதிவு செய்வேனாக...
ஆமென் !!!
Wednesday, May 26, 2010
வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..
வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..
எண்ணத்தின் வேர்களில் பல விடயங்கள் தங்கிவிடுவதுண்டு..பலமுறை எனது கருத்துக்களை பதிவு செய்ய எண்ணி ,சக நண்பர்களின் பதிவு போதுமென்று இருந்துவிடுகிறேன் நான் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில்.
இன்று காலை நண்பர் ராசா தொடர்பு கொண்டார்.. பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பின்னர்," மேடம், வால்பாறைக்கு சுற்றுலா சென்று வந்தேன்" என்றார்.. அந்த மலை வாசமும்,கூந்தல் கோதிய வெண்பஞ்சு மேகங்களும், மரணபயம் காட்டிய மரப்பாலமும் காட்சிகளாய் கண்களில் விரிய," மரப்பாலம் தாண்டி கல்லார் அருவிக்கு போனீர்களா? என்று கேட்டேன். " இல்லை மேடம், ரெண்டு பேறு அந்த பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்களாம். அதுனால அந்த பாலத்த மூடிட்டாங்க, பார்க்க முடியலங்க " என்றார்.அதிர்ந்து போனேன்..வால்பாறை பாலம் பற்றி நிச்சயம் எழுத முடிவு செய்தேன்.
படைப்பாளிகள்,விமர்சகர்கள் என ஒரு நண்பர்கள் குழு சென்ற வருடம் வால்பாறையில் கூடினோம்.அது குறித்து பல கருத்துக்கள் ,விமர்சனங்கள் எழுந்தது. அது பற்றி பல செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. என்றாலும் .தோழி தமிழ்நதி நிகழ்வு குறித்து மிக விபரமாக அவரது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார்.. அதை எனது வலைப்பூவில் இணைத்திருந்தேன். அத்துடன் வால்பாறை நிகழ்வு பற்றி மறந்து போனாலும் ,அங்கு அருவி அருகே செல்ல நடந்த பிரயத்தனங்கள் அந்த பாலம் பற்றிய விடயங்களை பலருடன் பகிர்ந்துகொண்டேன்..
எங்கள் வால்பாறை சந்திப்பில், நதியோரம், அருவியோரம் என விமர்சனகூட்டதை நடத்த எண்ணியதை தொடர்ந்து எங்களோடு வந்த சக படைப்பாளியின் நண்பர் சின்னக்கல்லார் அருவிக்கு போகலாம் என்றார் .அதை தொடர்ந்து அனைவரும் குதுகூலத்துடன் அருவி நோக்கி கிளம்பினோம்.
குற்றாலம் போல வண்டி நிறுத்திய இடத்தின் அருகே அருவி இருக்குமென்ற மிக பெரிய நம்பிக்கையுடன், (??) அவர்களோடு நானும் இணைந்துகொண்டேன். வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், நடக்கதொடன்கினோம் . சில் வண்டின் ரீங்காரமும், அருவியின் உல்லாச கூக்குரலும் என்னை குழந்தையாக மாற்றிவிட்டது..சற்று நேரத்தில் ஒத்தையடி பாதையும் அடர்ந்த வணமுமாக ,நீண்டு கொண்டே போனது . ஒருமணிநேரமும் நடந்து சென்ற பினரும் முடியாத பாதை கண்டு சோர்ந்துபோனேன்.. சற்று முன்னர்வரை உல்லாச கூக்குரலாக கேட்ட அருவியின் சத்தமும் ,வணத்தின் கணத்த அமைதியும் பயத்தை கொடுத்தது. ஊனமுற்ற வலது கால் என்னோடு ஒத்துழைக்க மறுத்தது.
' நான் வண்டிக்கு திரும்பி போய் விடுகிறேன், நீங்கள் செல்லுங்கள் என்று என்னுடன் வந்தவர்களிடம் கூறினேன். பாம்பு பூச்சி, சிறுத்தை எல்லாம் வருமாம். நீங்கள் தனியாக போக வேண்டாமென எச்சரிக்கப்படேன்.. என்னடா இது சோதனை, புத்தகம் எழுதிய படைப்பாளி கூட நிச்சயம் இத்தனை கஷ்டப்படிருப்பர்களா என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே நான் எனது வலது காலையும் கூடிக்கொண்டு செல்ல , பணப்பையை முன்னிரவு தொலைத்து விட்டதை சொல்லி புலம்பிக்கொண்டே
வந்தார் முஜுபுர்.
சில நிமிட நடையில் அப்படி ஒரு அபாயம் இருக்குமென யாரும் எதிர்பார்க்காவில்லை. ஆங்கில படங்களில் பார்ப்பது போன்ற உடைந்து, சிதைந்த ஒரு புராதான மரப்பாலம் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் கட்டிய மரப்பாலம்மாம் அது.
சிலர் உற்சாகமாய் சாகச குரல் எழுப்ப, பலர் யோசிக்க, என்னை போல சிலர் அதிர்ந்தே போய்விட்டார்கள். இடம் அறிந்து வந்திருக்க வேண்டும், தூரமும் தெரியவில்லை, இதில் எப்படி போவது என்று பல குரல்கள் .
பாலத்தின் நுழை வாயில் மட்டும் இரண்டு படிகள். இருந்தது.அதை தொடர்ந்து பக்கவாட்டில் இரும்பு கயிறும்,கீழே உருட்டு கட்டைகள் அடுக்கி அதன் மீது பலகை போடப்பட்டிருந்தது. பல இடங்களில் பலகை உடைந்திருக்க, பல இடங்களில் உருட்டு கட்டைகளை காணவில்லை. இருவர் சென்றால் பாலம் ஊஞ்சல் போல ஆடியது.. இருபது அடி உயர்த்தி இருந்தது உடைந்த அந்த புராதான பாலம்.
கீழே தண்ணீர் நுரைத்து சுளித்துகொண்டு ஓடியது. பெரும் பெரும் பாறைகள் பாசி படிந்து கிடந்தது. பாலதில்ருந்து விழுந்தால் , நீச்சல் தெரியாது என்பது வேறு விடயம். தலை பாறையில் மோதினால் , பிறகு நீச்சல் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன? பின் வருபவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் பலர் அருவி அருகே போய் விட,சிலர் பொறுப்பாய் பயந்தவர்களை கூட்டிச்சென்றார்கள்.
பாலத்திலிருந்து விழுந்து அடிபடுவதை விட ( சாவதை விடவும்) பூச்சி , சிறுத்தை வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்த அந்த படியில் உட்க்கார்ந்து கொள்ளலாமென முடிவு செய்தேன் நான் . தோழர் கம்பீரன்,காந்தி, நரன், மார்க்ஸ், சுகிர்தா, (பயத்தில் நான் கவனிக்க ,அல்லது பெயர் மறந்த சிலர் ) கண்டிப்பாக நான் போய் விடலாமென தைரியம் கூற, தோழர் செல்மாவின் நண்பர் கருணாகரன், அட வாங்கப்பா இன்பா,,மிஞ்சி போனால் மரணம் தானே என்று என்னை இழுத்துக்கொண்டு நடக்க துவங்க,(எதற்காய் இப்படி ஒரு பயணம் ) நான் ஒரு அடி எடுத்து வைக்க காலுக்கீழ் உருண்டது உருட்டு கட்டைகள்.மனசு பயத்தில் கதற, கீழே சுளித்துகொண்டு ஓடும் தண்ணீர் வேகத்தை விட வேகமாக ஓடியது எனது இரத்தம். அருவியின் சப்தத்தை விட வேகமாக கேட்டது எனது இதய துடிப்பு.
மிக ஒல்லியாக இருந்த மஞ்சு என் பக்க வாட்டில் வர, கயிற்றின் மீது நடக்கும் கூத்தாடி போல ஒரு வழியாக பாலத்தை கடந்து போய் இறங்கியவுடன், இவ்ளோதான், இதுக்கு போய் பயந்திங்களே என்று பலர் சொல்ல, திரும்பி பார்த்தால் ராஜன் குரே முகம் சிவக்க பாலத்தில் வந்து கொண்டிருந்தார். காந்தி, கம்பீரன், நரன் என பலர் அனைவரும் வரும் வரை பார்த்துகொண்டிருந்தார்கள்.
சரி, அருவி வந்துவிட்டது என நினைத்து முன்னேற எத்தனிக்கையில், மிக பெரிய வழுக்கு பாறையில் பிடிமானமின்றி நாலு காலால் தாவி கொண்டிருந்தனர் பலர். பல்லி போல பாறையை ஒட்டியபடி தவழ்ந்து மேலேறினர் சிலர்.. மிரண்டு போனோம் பலர்.
காந்தி போய் ஒரு மாற்று பாதை பார்த்து வர,பலர் அந்த பாதையில் சென்றோம்..ஒரு வழியாக மேலே சென்று அருவியை கண்டபொழுது மீண்டும் அந்த சுகம் வந்து மனசில் உட்கார்ந்தது...
அருவியிலிருந்து ஓடும் நீரில் கால் நனைய நீரில் அமர்ந்த பொழுது ஒரு ஜென்மம் அங்கு வாழ்ந்தது போல இருந்தது. அங்கு திரிந்த மந்திகளின் உற்சாகம் என்னிடமும் கொஞ்ச நேரம் தொற்றிக்கொண்டது.
ஒரு புறம் விமர்சனகூட்டம் தொடங்கியது. யாழன் புகைப்படமெடுத்து கொண்டிருந்தார்.
அனைவரும் வந்து சேர்ந்து கூட்டம் தொடங்கிய பொழுதே ,மூன்று மணிக்கு தண்ணி திறந்து விடுவோம். நீங்க இருக்குமிடமெல்லாம் நீர் வந்து விடும்மென வன அதிகாரி
ஒருவர் கூற, பாக்கி இருந்த விமர்சனங்களை தங்குமிடத்தில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது...
மீண்டும் அந்த வழுக்கு பாறை, பாலத்தில் ஒரு பயணமா? கண்டிப்பாக முடியாது என தோன்றியது.
பாலத்திலிருந்து விழுவது தானே உங்க பயம், வேறு மார்க்கம் பார்கிறேன் என்று காந்தி கூறி பாலத்திற்கு கீழே தண்ணீரில் நடந்து அந்த பாதையை கண்டு வந்தார்.
பாலம் குறித்தான பயம் உள்ளவர்கள் நீரில் கடப்பது என்று முடிவானது..காந்தி என்னை அழைத்து செல்வதாய் கூறினார். ஐந்தாண்டு திட்டம் போல திட்டம் தீட்டினோம்.. அவர் கால் வைக்கும் பாறையை பார்த்து நான் கால் வைக்கவேண்டும், வேறு எங்கும் பார்க்க கூடாது, என்று எனக்கு சொல்லப்பட்டது.எனது கையை பிடித்து கொண்டார் காந்தி.
பாசி படர்ந்து வழுக்கும் அந்த பாறைகளை பார்த்துக்கொண்டே தண்ணீரில் இறங்கினேன். ராஜன் குரே நெஞ்சளவு நீரில் தடுமாற, கைபேசிகள் தண்ணீரில் தவற விட்ட சுகிர்தா தண்ணீரில் கைபேசியை தேட, எதையும் பார்க்காமல் வாங்க என காந்தி கூறியதை தொடர்ந்து நடக்க தொடங்கினேன்.
நாங்கள் சென்ற பாதை என் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்தது.பல இடங்கள் வழுக்க ,சமாளித்து கரையேறி விட்டோம்.
தண்ணீரில் மிக கஷடப்பட்டவர்கள் பாலத்திலேயே போயிருக்கலாமோவென பேசிகொண்டார்கள். மீண்டும் நீண்ட தூரம் நடக்க வேண்டுமென்று உணர்ந்தாலும் இம்முறை அந்த கஷ்டம் தெரியவில்லை.
நடந்து சென்று வண்டி ஏறும்பொழுது உடைகள் காய்ந்து விட்டிருந்தது .நாங்கள் போய் வண்டியில் ஏற, இருக்கயின்றி,சுகிர்தா , மஞ்சு, காந்தி, இசை, நரன்,ஆகியோர் படியில் அமர, நானும், ராஜன் குறேவும் பக்கத்தில் உள்ள இருக்கைகளில் அமரவேண்டியிருந்ததது . ரெண்டு குண்டு ஒரே இடத்திலா என்று நான் கேட்டக்க, குண்டு சத்தமே வேண்டாமென்று இங்கு வந்தால் இங்கும் ரெண்டு குண்டா என தமிழ்நதி கேட்க்க கால் வலியை கடந்தது சிரிப்பு ஒலி..
அந்த மரண பாலம் நிச்சயம் காவு வாங்கும் என்ற எனது எண்ணம் நிஜமாகி போனது கொடுமை !!
வன பாதுகாப்பு அதிகாரிகள் இதை ஏன் முனரே சரி செய்திருக்க கூடாது?? இழப்பிற்கு பின்னரே பாலம் மூடப்படுவது ஏன்? இந்த உயிர் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?
Tuesday, May 25, 2010
தோழர் இன்குலாப் அவர்களின் மினஞ்சல்
From: sahul hameed sks
Date: 2010/5/12
Subject: Re: பூமி தின்னி / இன்பா
To: rama inba
அன்புத் தோழரே இன்பா,
இப்பொழுதுதான் தங்கள் கருத்த நட்சத்திரங்கள் என் வெளியில் ராசிகளை வரைந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
காலத்தின் கண்ணாடியில் தகிக்கும்இவ்விரண்டு கவிதைகளும் சுடர் முகங்கள் காட்டும்போராடும் மானுடம் உம பாடலை இசைத்தபடி களம் செல்லும்.
என்வெளி அதிர உங்கள் எழுத்துகள் இறங்குவதாக.
தோழமையுடன்
inqulab.
Date: 2010/5/12
Subject: Re: பூமி தின்னி / இன்பா
To: rama inba
அன்புத் தோழரே இன்பா,
இப்பொழுதுதான் தங்கள் கருத்த நட்சத்திரங்கள் என் வெளியில் ராசிகளை வரைந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
காலத்தின் கண்ணாடியில் தகிக்கும்இவ்விரண்டு கவிதைகளும் சுடர் முகங்கள் காட்டும்போராடும் மானுடம் உம பாடலை இசைத்தபடி களம் செல்லும்.
என்வெளி அதிர உங்கள் எழுத்துகள் இறங்குவதாக.
தோழமையுடன்
inqulab.
Monday, May 24, 2010
Sunday, May 23, 2010
சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை என்று குரல் எழுப்பும் பாறிபா முஹஜெர் என்ற பத்திரிகையாளர் பட்ட கஷ்டங்கள் தான் இன்று ஈரானிய பெண்களின் பிரச்சனைகளை உலகுக்கு கொண்டுவந்துள்ளது.
புது தில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெஹ்ரன் விமான நிலையத்திற்கு வந்த தளத் தகினியா , மந்ஸௌரெஹ் ஷோஜாயி, ப்ஹர்நாஸ்,என்ற மூன்று பெண் பத்திரிகையாளர்கள்,விமான
நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
பெண் சுதந்திரம், சட்ட பாதுகாப்பு,விவாகரத்து கோர உரிமை கோரல்,குழந்தையின் பாதுகாப்பு கோரல், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்த படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக பல பெண்கள் கைது செயபடுவது சர்வ சாதாரண விடயாமகிபோனது இரானில். கைது செயப்படும் பெண்கள் காணமல் போவதும்,தூக்கில் போடபடுவதும் அதிகரித்துவிட்டது.ஒரு குற்றம் நடந்தால் அந்த குற்றத்திற்கு சாட்சியாக ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால்,ஆணின் சாட்சி மட்டுமே நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஷேக்ஹோலேச்லம் என்ற பெண் "அசர் மேகார் ' என்ற பெண்கள் அமைப்பை நடதியதர்க்காய் கைது செய்பட்டு மூன்று வருடம் கடுங்காவலில் வைக்கப்பட்டார். பலர் வெளிநாடுகல்லுக்கு தப்பி அடைக்கலம் அடைந்துள்ளனர்.
ஷேக்ஹோலேச்லம்,ஜெல்வெஹ் ஜாவேரி, மரியம் ஆகிய மூன்று பெண்களும், விசாரயின்றி சிறையில் வாடும் பெண்களை விடுதலை செய்யக்கோரி ஒரு கோடி கையெழுத்து பெரும் முயற்சியில் உள்ளனர்.
நடத்தை தவறியதாக குற்றம் சாட்டப்படும் பெண்கள் பொது மக்கள் முனிலையில் கல் எரிந்து கொலை செய்யபடுவதையை கண்டித்து பலர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தை கலைக்க மிளகு பொடி கரைசல் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சிவப்பு நிற பெயின்ட்டை அடித்தும் கலைக்கப்பட்டனர்.அமைப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு கண்கள் கட்டப்பட்டு,எந்த இடத்தில இருகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் வைக்கப்பட்டனர்.
இப்படி விசாரணையின்றி வாடும் பெண்கள் சோகம் ஒரு வகையென்றால் ,தூக்கில் போடப்படும் பெண்களின் நிலை மிக கொடுமையாக ,எவரையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது..
ஒரு தந்தை தன மகளை எழுபது வயது நிரம்பிய கிழவனுக்கு மணமுடிக்க உரிமை உள்ளது. அதை அந்த பெண் குழந்தையின் தாய் தடுத்தால் அவளுக்கு தண்டனை உண்டு. மனைவியாக நாலு பெண்களையும்,வைப்பாட்டியாக பல பெண்களையும் வைத்துகொள்ள சட்டம் உதவுகிறது.
ஒரு விபத்தில் கணவனும் மனைவியும் அடிபட்டால் கணவனுக்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டு தொகையில் பாதி தான் அந்த பெண்ணுக்கு தரபடுகிறது.
இஸ்லாமிய பீனல் கோட் அறுநூத்தி பத்து சட்டம் மிக கடுமையாக பெண்களை பாதிக்கிறது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இன்னும் நாலு வருட தண்டனை முடிந்து வெளியே வரவில்லை.பரீபா எழுதிய நூல்கள் தடை செய்யப்பட்டுவிட்டன.
சூசன் என்ற பெண்மணி, மிக பெரிய பதவியில் அமெரிக்க நிறுவனித்தில் வேலை பார்த்தார். இவர் இரானிய நாட்டின் நடப்புகள் மற்றும் கொடுமையான சட்டங்களை வெளிஉலகுக்கு சொல்லும் விதமாக ஒரு வலைப்பூ தொடகினார். அதற்காக கைது செய்யப்பட்டு, அவர் வீட்டில் அவர் பிள்ளைகள் முன்பாக கடுமையாக அடிக்கப்பட்டார். அவரது கணினி,மற்று அவரது உடமைகளையும் எடுத்து சென்றது காவல் துறை.
முன்னணி பத்திரிகையாளரும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவருமான பாரீபா இன்றும் நாடு திரும்ப அஞ்சி வெளி நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார்.நாடு திரும்பினால் கைது செயபடுவது நிச்சயம் என்ற அச்சத்தில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்..
இரானிய சட்டத்தில், பெண் ஒன்பது வயதானாலே தவறு செய்தால் தண்டிக்க படுவாள்.வீட்டில் நடக்கும் தவறுகளுக்கு அதிக பட்சமாக பத்து வருட தண்டனை வழங்கப்படும்.நாட்டின் சட்டத்தை மதிக்காவிட்டலோ,அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டாலோ, உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்படும்.
சிறுமிகள் காதலித்தாலோ,திருமணதிற்கு முன் உடலுறவு கொண்டாலோ,கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.இஸ்லாமிய சட்டத்தை மீற முயல்வதாக கூறி தூக்கிலிடப்பட்டால் சிறுமி அட்டேபா.
"அவளுக்கு நாளை மரண தண்டனை “
“அதற்கென்ன …நிறைவேற்று”
“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”
“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “
இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.
ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.
இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!
இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.
எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.
பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன்.பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.
கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.
கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.
இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.
சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.
அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.
மனித உரிமை மீறல் நடக்கும் இந்த விடயங்களை பார்த்து சேகரித்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறும் மனித உரிமை கழகம் (?) எப்போது நடவடிக்கை எடுக்கும்?? பத்திரிக்கை சுதந்திரம் வேண்டாம்..சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை ,என்ற இவர்களது குரல் எங்கும் ஒலித்து கேட்டக்க வேண்டியவர்கள் காதுக்கு போகுமா?
Chikky mukki.com ,feb issue 2010
Tuesday, May 11, 2010
தொல் மரபி
தொல் மரபி
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.
இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே
உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..
யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...
அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..
இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.
உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்
இவுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.
இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே
உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..
யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...
அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..
இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.
உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்
இவுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
அந்திமழை
மரங்களிலிருந்து
செடியிலிருந்து
கொடியிலிருந்து
மலர்ந்துகொண்டே
இருக்கின்றான் மலர்கள்
பிறந்து கொண்டே
இருக்கும் உலகம்
வெவ்வேறு கருவறையிலிருந்து
***** ***** ***** *****
உன் பிரார்த்தனைக்கான
மலர்களை தினமும்
என் தோட்டத்திலிருந்து
கொய்கிறாய்
உன் பிரார்த்தனைக்கான
வார்த்தைகளைக்கூட
என்னிடமிருந்தே
இரவல் வாங்குகிறாய்
உன் பிரார்த்தனை
முழுவதுமாய்
என்னையே முணுமுணுக்கிறாய்
பின்னொரு நாள்
என் தோட்டத்திலிருந்த
இறுதி மலரையும்
பறித்து போனாய்.
***** ***** ***** *****
உன்னைவிட்டு நான்
அல்லது
என்னை விட்டு நீ
விலகிப் போகும்
நாளொன்றில்
தத்தம் நினைவுகளோடு
பயணிக்கிறோம்
போகும் பாதையின்
ஓரங்களில்
கடந்து போய்கொண்டிருக்கிறது
கருவேல மரங்கள்
***** ***** ***** *****
பற்றி எரியும்
மூங்கில் காடு
சுழன்றடிக்கும்
பெருங்காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கிறது
தனக்கான துயரகீதத்தை
கருகி கிடக்கும்
புல்லாங்குழளினூடாக
***** ***** ***** *****
புதைவதுதான்
வாழ்வென்பது
தெரியாதெனக்கு
தியானத்தில்
புத்தகத்தில்
காதலில்
உறவுகளில்
புதைவதுதான்
மரணமென்பதும்
தெரியாதெனக்கு
***** ***** ***** *****
பாதங்களை
தொடர்ந்தபடி இருக்கின்றன
கரைகள்
தடயமற்றுச் செல்ல
நீருக்குள் இறங்கி நடக்கிறாய்
போ..
கரையேறிச் செல்கையில்
என் உருவம் கண்டு
திகைப்பின் ஆழத்திற்குள்...
***** ***** ***** *****
என்னிலிருந்து மீண்டு
உயரே பறக்கிறாய்
ஒரு பறவையென
வெகு தொலைவிற்கு
உதிர்ந்து விழும்
உன் சிறு நினைவுகளை எடுத்து
ஒளித்து வைக்கிறேன்
அனுமதிக்கப்பட்டு விட்டோம்
வெவ்வேறு காலங்களுக்கு...
***** ***** ***** *****
நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில் இறங்கி
நடக்கத் துவங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்
செடியிலிருந்து
கொடியிலிருந்து
மலர்ந்துகொண்டே
இருக்கின்றான் மலர்கள்
பிறந்து கொண்டே
இருக்கும் உலகம்
வெவ்வேறு கருவறையிலிருந்து
***** ***** ***** *****
உன் பிரார்த்தனைக்கான
மலர்களை தினமும்
என் தோட்டத்திலிருந்து
கொய்கிறாய்
உன் பிரார்த்தனைக்கான
வார்த்தைகளைக்கூட
என்னிடமிருந்தே
இரவல் வாங்குகிறாய்
உன் பிரார்த்தனை
முழுவதுமாய்
என்னையே முணுமுணுக்கிறாய்
பின்னொரு நாள்
என் தோட்டத்திலிருந்த
இறுதி மலரையும்
பறித்து போனாய்.
***** ***** ***** *****
உன்னைவிட்டு நான்
அல்லது
என்னை விட்டு நீ
விலகிப் போகும்
நாளொன்றில்
தத்தம் நினைவுகளோடு
பயணிக்கிறோம்
போகும் பாதையின்
ஓரங்களில்
கடந்து போய்கொண்டிருக்கிறது
கருவேல மரங்கள்
***** ***** ***** *****
பற்றி எரியும்
மூங்கில் காடு
சுழன்றடிக்கும்
பெருங்காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கிறது
தனக்கான துயரகீதத்தை
கருகி கிடக்கும்
புல்லாங்குழளினூடாக
***** ***** ***** *****
புதைவதுதான்
வாழ்வென்பது
தெரியாதெனக்கு
தியானத்தில்
புத்தகத்தில்
காதலில்
உறவுகளில்
புதைவதுதான்
மரணமென்பதும்
தெரியாதெனக்கு
***** ***** ***** *****
பாதங்களை
தொடர்ந்தபடி இருக்கின்றன
கரைகள்
தடயமற்றுச் செல்ல
நீருக்குள் இறங்கி நடக்கிறாய்
போ..
கரையேறிச் செல்கையில்
என் உருவம் கண்டு
திகைப்பின் ஆழத்திற்குள்...
***** ***** ***** *****
என்னிலிருந்து மீண்டு
உயரே பறக்கிறாய்
ஒரு பறவையென
வெகு தொலைவிற்கு
உதிர்ந்து விழும்
உன் சிறு நினைவுகளை எடுத்து
ஒளித்து வைக்கிறேன்
அனுமதிக்கப்பட்டு விட்டோம்
வெவ்வேறு காலங்களுக்கு...
***** ***** ***** *****
நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில் இறங்கி
நடக்கத் துவங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்
Saturday, May 1, 2010
வெவ்வேறு உலகம்
நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில்
இறங்கி
நடக்கதொடங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்.
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில்
இறங்கி
நடக்கதொடங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்.
Saturday, August 22, 2009
Monday, July 27, 2009
பூமி தின்னி

பூமி தின்னி
அவன் பூமி தின்னி -
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்
அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்
அவன் ஸ்த்ரி வேட்டையன் -
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன் -
தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்
கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவி,
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி .
Wednesday, July 22, 2009
உயிரோசை -ஜூன் இதழில் வெளியான கவிதை
வசந்த காலம்
உறவினர்கள் வந்து
தங்கிவிட்டுப்போன வீட்டை
கழுவிச் சுத்தப்படுத்துவது போல
குழந்தைகள் சிதறடித்த
விளையாட்டுப் பொருட்களை
அலமாரியில் அடுக்கி வைப்பது போல
வசந்த காலம்
முடிந்த நாளின் அதிகாலையில்
பூக்கள் மூடிக் கிடக்கும்
நகரத்தை
சுத்தம் செய்கிறார்கள்
துப்புரவுப் பணியாளர்கள் .
உறவினர்கள் வந்து
தங்கிவிட்டுப்போன வீட்டை
கழுவிச் சுத்தப்படுத்துவது போல
குழந்தைகள் சிதறடித்த
விளையாட்டுப் பொருட்களை
அலமாரியில் அடுக்கி வைப்பது போல
வசந்த காலம்
முடிந்த நாளின் அதிகாலையில்
பூக்கள் மூடிக் கிடக்கும்
நகரத்தை
சுத்தம் செய்கிறார்கள்
துப்புரவுப் பணியாளர்கள் .
Thursday, July 16, 2009
மணல்வீடு இதழ் 1(மே - ஜூன்-2008) இல் வெளியான கவிதைகள்

வெள்ளை காகிதம்
---------------------------
மேசை மேலிருக்கும்
எதுவும் எழுதபடாத
வெள்ளை காகிதம் -அதில்
ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும்
பறந்து செல்லும்
வெள்ளை கொக்குகளும்
பறவைகள் ஏதுமற்ற
வெற்று வானமும் .
காட்டுத்தீ
--------------கொளுந்துவிட்டு எரியும்
காட்டுத் தீயினுள்ளே
ஊதாநிற சமுத்திரமொன்றும்
மஞ்சள்நிற நடுமதியமொன்றும்
பருமனான ஆரஞ்சு பழமொன்றும்
உற்றுப்பார் ....
உள்ளே தெரியும் .
வெவ்வேறு மரம்
------------------------
மழை காலத்திற்கு முந்தைய மரம்
மழை காலத்திற்கு பிந்தைய மரம்
கோடை காலத்திற்கு முந்தைய மரம்
கோடை காலத்திற்கு பிந்தைய மரம்
எல்லாம் வேறுவேறு
அதன் வேர்கள் மட்டுமே ஓன்று .
வசந்த காலம்
---------------------
ஆறு மாதத்திற்கு முன்
வசந்த காலத்தில்
நான் வேறொரு ஊரில்
வேறொரு வீட்டில் வசித்தேன்
மஞ்சளும் ,சிகப்புமாய்
பூக்கள் மூடிக் கிடக்கும்
சாலையின்
இறுதியில் முடியும்
வீடாய் இருந்தது அது .
இப்போது
கோடை காலத்தில்
நிறம் மங்கிய இலைகளும்
இலைகளே இல்லாத மரங்களும்
கொண்ட சாலையின்
இறுதியில் முடியும்
( இந்த முறையும் இறுதியாக தானிருந்தது)
வீடாயிருந்தது.
இந்த இந்தஇரண்டு வீடுகளும்
ஓன்று தான் என்கிறார்கள்
நான் நம்பவில்லை .
புது எழுத்து இதழ் 17 -( ஜூலை'2009 ) இல் வெளியான கவிதைகள்

பூவாத்தாவரம்
--------------------
வசந்தகாலம்
மண்டப சாலையில்
அதிகமாய் உதிர்ந்துக் கிடக்கும்
மஞ்சள் நிறப்பூக்களை
அள்ளிக் கொண்டுப் போய் கொட்டுகிறது
காற்று .
ஒரு பூவாத்தாவரத்தின் காலடியில்
சிற்றாறு
------------
பாலைவனத்தின் மணல் வெளியெங்கிலும்
ஓடுகிறது சிற்றாறு
தரையில் படாமல் ஓடுகிறது
அதன் நீர்
நிலவும் மிதக்காது
நிலவும் மிதக்காது
சூரிய ஒளியும் பாவாத
அச்சிற்றாறு
ஒட்டகங்களின்
கூனல் முதுகுகளில்.
கண்ணாடி றெக்கைகள்
-------------------------------
கிழிபட்டு
வேலியோரத்தில்
இறந்து கிடக்கும் தும்பியை
புரட்டிப்புரட்டிப் பார்க்கிறது
காற்று .
அதை எழுப்பும் விதமாய்
உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான 3 கவிதைகள்
பால் சுரக்கும் எனது மார்பு
-------------------------------------
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன .
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன.
என் மார்பில் பால் சுரக்கிறது .
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன .
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்குபொருந்தாத
மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
நாய்க்குட்டி பொம்மை
--------------------------------
அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து
தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி
அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை .
உணவு மேசையை நோக்கி
உணவு மேசையின் மேலிருக்கும்
வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட
ரொட்டி துண்டுகளை நோக்கி
மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை
அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்
விளையாடிகொண்டே இருந்துவிட்டு
அப்படியே தூங்கி விட்டது குழந்தை .
காலையில் எழுந்து பார்த்தேன் .
குழந்தையின் முதுகிற்கு அடியில்
நசுங்கி கிடந்தது பொம்மை .
பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .
சிறகுகள்
-------------
மனதின் சரிவுகளில்
எண்ணிலடங்கா பறவைகள்
நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது
பருத்த ஆலமரமொன்று
கண்களில் உப்பு நீர் சுனை .
மனதின் புற வெளியில்
எல்லையில்லா வானம்
எப்போதாவது தூரத்தில்
நீ தெரியும் வேளை
சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு
பறக்க துவங்குகின்றன .
ஆயிரமாயிரம் பறவைகள்
வானம் முழுக்க சிறகுகள் .
-------------------------------------
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன .
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன.
என் மார்பில் பால் சுரக்கிறது .
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன .
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்குபொருந்தாத
மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
நாய்க்குட்டி பொம்மை
--------------------------------
அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து
தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி
அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை .
உணவு மேசையை நோக்கி
உணவு மேசையின் மேலிருக்கும்
வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட
ரொட்டி துண்டுகளை நோக்கி
மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை
அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்
விளையாடிகொண்டே இருந்துவிட்டு
அப்படியே தூங்கி விட்டது குழந்தை .
காலையில் எழுந்து பார்த்தேன் .
குழந்தையின் முதுகிற்கு அடியில்
நசுங்கி கிடந்தது பொம்மை .
பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .
சிறகுகள்
-------------
மனதின் சரிவுகளில்
எண்ணிலடங்கா பறவைகள்
நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது
பருத்த ஆலமரமொன்று
கண்களில் உப்பு நீர் சுனை .
மனதின் புற வெளியில்
எல்லையில்லா வானம்
எப்போதாவது தூரத்தில்
நீ தெரியும் வேளை
சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு
பறக்க துவங்குகின்றன .
ஆயிரமாயிரம் பறவைகள்
வானம் முழுக்க சிறகுகள் .
Sunday, June 21, 2009
வால்பாறை இலக்கியக் கூட்டம்-தமிழ்நதி
- கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என்று ஏறத்தாழ நாற்பதுபேரை உள்ளடக்கியபடி, வால்பாறையை நோக்கி அந்த மலைப்பாதையில் விரைந்துகொண்டிருந்தது பேருந்து. அபாயமும் அழகும் எப்போதும் சமாந்தரத்தில் பயணிப்பனபோல. கொண்டையூசி வளைவுகளில் திரும்பும்போதும், ஆழத்தில் அபாய அழைப்போடு கிடந்த பள்ளத்தாக்குகளை நம்மை மீறி எழும் கற்பனைகளுடன் பார்க்கும்போதும் உடல் சிறிது கூசியடங்கியது. எப்போதாவது தென்படும் மலையருவிகள், மிக நேர்த்தியான வரிசையிலமைந்த தேயிலைச்செடிகளால் பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட மலைகள், வெள்ளையும் மெலிதான சாம்பலும் கலந்து அள்ளிச் சாப்பிடத் தூண்டியபடி மலைகளில் செல்லங்கொட்டிக் கிடக்கும் மேகப்பஞ்சுகள்... பொள்ளாச்சியிலிருந்து இரண்டே மணிப் பயண தூரத்தில் இப்படியொரு அழகு கொட்டிக்கிடப்பதை நம்பமுடியாமல்தானிருந்தது. அ.மார்க்ஸ், மலர்விழி, அமுதா, கவின்மலர், நீலகண்டன், இசை, நரன், இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், மதிவண்ணன், ஜெயந்தி, சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம், லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், விஷ்ணுபுரம் சரவணன், யாழன் ஆதி, கம்பீரன், அய்யப்ப மாதவன், மஞ்சு, வித்யாசாகர், சுகன்(பிரான்ஸ்), சஃபி, எஸ்.தேன்மொழி, எழில்செல்வன், முஜிபுர் ரகுமான், எச்.ஜி.ரசூல், ராஜன் குறை, இளங்கவி அருள், அசதா, க.மோகனரங்கன், சுரேஷ்வரன், சிறிதர், சாஹிப் ஹிரண், நடா.சிவகுமார், கரிகாலன், காந்தி (ஓவியர்), மணிவண்ணன் (ஓவியர்), தமிழ்நதி கலந்துகொண்டவர்களில் நினைவில் நின்ற பெயர்கள் இவ்வளவுதான். பயணங்கள் நெடுகிலும் ஏதாவது ஞாபகங்கள் கூடக் கூட ஓடிவரும். ‘மழையைத் தேடித் தொடரும் பயணம்’என்ற வாக்கியம் அன்று அடிக்கடி தோன்றி மறைந்தது. சென்னையிலிருந்து கிளம்பியபோது ‘தேனி சில்லென்றிருக்கும். சிலசமயம் மழைகூடப் பெய்யலாம்’என்றார்கள். பெய்யவில்லை. ‘பொள்ளாச்சி அற்புதமாக இருக்கும்’என்றார்கள். நான் தங்கிய விடுதி நகரமத்தியில் இருந்தது. நகரங்களில் அற்புதங்களைக் காண்பதற்கில்லை. வால்பாறையை நோக்கி கொழுத்தும் வெய்யிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது மழைக்காகவும் குறைந்தபட்சம் குளிருக்காகவும் உள்மனசு ஏங்கிக்கொண்டிருந்தது. நாற்பது கொண்டையூசி வளைவுகளில் இருபதுக்குமேல் கடந்தபிறகு குளிர் மெல்லென முகத்தைத் தடவியது. நெடுநாள் பிரிந்திருந்தவனின் கண்களை எதேச்சையாக எதிர்கொள்ள நேர்ந்த பரவசத்தைக் குளிர் தந்தது. நாங்கள் தங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், தோழிகள் சிலருடன் ஒரு அறைக்குள் இடம்பிடித்துக்கொண்டேன். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களான லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம் ஆகியோரால் அந்தக் கவிதை விமர்சன நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 13ஆம் திகதி எழுத்தாளர் கமலாதாஸ் நினைவரங்கமாகவும், ஜூன் 14ஆம் திகதி கவிஞர் ராஜமார்த்தாண்டன் நினைவரங்கமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரவேற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை பேசும்போது, தொடர்ந்து நினைவரங்கமாகவே நடத்தவேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம், அப்பாஸ், சி.மணி, கமலாதாஸ், ராஜமார்த்தாண்டன் எனத் தொடர்வது வருந்தத்தக்கது என்றார். லீனாவைத் தொடர்ந்து அ.மார்க்ஸ் மற்றும் கரிகாலன் உரையாற்றினார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் கூடிப் பேசுவதற்கு இவ்வகையான கூட்டங்கள் உதவுவதாக கரிகாலன் சொன்னார். எழுத்து, கசடதபற, மீட்சி என அவ்வக்காலங்களில் கவிதைக்கு உறுதுணையாக இருந்த பல சஞ்சிகை மற்றும் எழுத்தியக்கங்களைக் குறித்து அ.மார்க்ஸ் பேசினார். புலப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது என்று கூறிய அவர் அவற்றுக்கு உதாரணமாக, நக்சல்பாரிகளால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசிகள் வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்படுவது, நகரை அழகுபடுத்துகிறோம் என்ற அரச முன்னெடுப்புகளால் பலவந்தமாக இடம்பெயர்க்கப்படுவோர் ஆகியவற்றை முன்வைத்துப் பேசினார். இந்த இயந்திரமயமான உலகில் நம்மைப் புதுக்கிக்கொள்ள உதவும் காரணங்களில் ஒன்றாக கவிதை தொழிற்படுகிறது என்றார். கமலாதாஸ் அரங்கினைத் தொடக்கிவைத்துப் பேசவேண்டிய கவிஞர் மாலதி மைத்ரி வரமுடியாமற் போனமையால், என்னை ஒரு கட்டுரை எழுதி வந்து வாசிக்கமுடியுமா என்று கேட்டிருந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு நாள் அவகாசத்தில் ஒருவழியாக அதை எழுதி ஒப்பேற்றி முடித்தேன். கட்டுரையில், கமலாதாஸ் இறந்தபிற்பாடு அவரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். ஜெயமோகனின் திருவாய்மொழிதல் குறித்து பலருக்கும் பரவலான அதிருப்தியும் கசப்பும் இருந்ததைக் கூட்டத்தில் காணமுடிந்தது. “ஜெயமோகனது இணையத்தளங்களில் இடப்படும் கடிதங்களில் பல அவரே அவருக்கு எழுதிக்கொண்டவை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?”என்றொரு நண்பர் கேட்டார். இத்தகைய சித்துவிளையாட்டுக்களை, சுயசொறிதல்களை நான் அறியாதிருந்ததை அவரிடம் ஒத்துக்கொண்டேன். ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’கவிதைத் தொகுப்பைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் கட்டுரை வாசித்தார். பித்து, போதை, கவித்துவம் இம்மூன்றும் கலந்த கவிதைகளே ரமேஷ் பிரேதனுடையவை என்றார் அவர். தோற்கடிக்கப்பட்ட மனிதனின் வன்மம், துரோகத்தினால் நொய்மையடைந்த ஒரு மனம் ஆகியவற்றை அவற்றில் காணலாம் என்று மேலும் சொன்னார். ‘சாராயக்கடை’ எழுதப்பட்ட பின்னணி பற்றி இளங்கவி அருள் பேசுகையில், ரமேஷ் பிரேதன் தற்கொலைக்கு நெருக்கமான ஒரு மனோநிலையிலும் பித்து நிலையிலும் இருந்து அக்கவிதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டார். அடுத்து, இசையின் ‘உறுமீன்களற்ற நதி’கவிதைத் தொகுப்பை கரிகாலன் விமர்சித்துப் பேசினார். அவருடைய வார்த்தைகளில் சொன்னால் அது ‘விமர்சனமாக அல்லாது கொண்டாடுவதாகவே’அமைந்திருந்தது. ஒரு மகாகவிக்குரிய சாத்தியக்கூறுகளைத் தான் இசையின் கவிதைகளில் காண்பதாக கரிகாலன் சொன்னபோது, கைதட்டல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. (அப்போதிருந்து எங்களது நண்பர் வட்டத்தில் இசையை ‘மகாகவி’என்றே அழைக்கவாரம்பித்திருக்கிறோம்.) மிக எளிமையான சொற்களைக்கொண்டு கவிதை புனைவதோடல்லாமல், புதிய வடிவங்களையும் அவர் பரீட்சித்துப் பார்ப்பதாகவும், முன்னதன் சாயல் பின்னதில் இல்லாமலிருக்க முடிந்தளவு முயற்சிப்பதாகவும் கரிகாலன் மேலும் வியந்தார். ஆதர்ச உலகிற்கும் நடைமுறை உலகிற்கும் இடையிலான கவிஞனின் தத்தளிப்பை இசையின் கவிதைகளில் காணமுடிவதாகவும் கூறினார். அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்பைக் குறித்து அசதா கட்டுரை வாசித்தார். அந்தத் தொகுப்பை ஒரு இரயில் பயணத்தின்போது வாசித்ததாகவும், மனதில் பெரியதொரு பாதிப்பை நிகழ்த்தக்கூடிய தொகுப்பாக நிசி அகவலை இனங்கண்டதாகவும் அவர் சொன்னார். ஆழ்மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணத்தக்க அந்தக் கவிதைகளின் சிறப்பம்சமாக, தன்முனைப்பு அதாவது கவிஞனின் குறுக்கீடு இல்லாதிருந்ததைக் குறிப்பிட்டார். கவிதையே உச்சபட்ச சாத்தியங்களை நோக்கித் தன்னை நகர்த்திச் செல்லும் பாங்கினை அய்யப்ப மாதவனின் கவிதைகளில் கண்ணுற்றதாக அவர் பாராட்டினார். லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைக்கான விமர்சனத்தை வழங்கவிருந்த க.பஞ்சாங்கம் அவர்கள் வரமுடியாமற் போன காரணத்தால், பஞ்சாங்கத்தின் கட்டுரையை சல்மா பிரியதர்சன் வாசித்தளித்தார். நவீன பெண் எழுத்தின் உச்சமாக லீனாவின் கவிதைகளை பஞ்சாங்கம் கொண்டாடியிருந்தார். நனவெளி மனதை நனவெளி வார்த்தைகளாலும் கவிதைப் பக்கங்களிலிருந்த குகை ஓவியங்களாலும் வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். பாலினம் கடந்த எழுத்து பற்றிய லீனாவின் கனவைச் சிலாகித்திருந்தார். ‘ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றமே இலக்கியம்’என்ற ஃபிராய்டின் வாக்கியத்தை ஓரிடத்தில் மேற்கோள் காட்டி, ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாக இந்தக் கவிதைகளைப் பார்ப்பதாகவும் சொல்லியிருந்தார்.பஞ்சாங்கத்தின் விமர்சனத்தில் இடம்பெற்ற ‘காமக்களியாட்டம்’என்ற சொல்லின் விபரீத அர்த்தம் குறித்து முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்வியினையடுத்து, கூட்டம் கொஞ்ச நேரம் அதைப் பற்றிச் சலசலத்தது. “விமர்சனம் என்பது பாராட்டாக, புகழாரமாக இருத்தல் தகாது; ஆனால், இதுவரையில் வாசிக்கப்பட்ட நான்கு கட்டுரைகளிலும் அத்தன்மையினையே அவதானிக்க முடிந்தது”என்று முஜிபுர் ரகுமான் விமர்சித்தார். அவரையடுத்துப் பேசிய ராஜன் குறை, அக்கருத்துக்கு எதிர்வளமாகச் சொன்னார். அதாவது, “கோட்பாட்டு ரீதியான வாதங்களில் இருக்கக்கூடிய வரண்ட தன்மையை விடுத்து, சககவிஞரை உற்சாகப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாக நாம் ஏன் இதைப் பார்த்தலாகாது?” என்று கேள்வியெழுப்பினார். அ.மார்க்ஸ் குறைகளும் சுட்டிக்காட்டப்படுவதே சிறந்த விமர்சனமாக இருக்கமுடியும் என்றார். அடுத்து, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’யை விமர்சித்துப் பேசிய மதிவண்ணன் அதீத கோபத்துடன் கூட்டத்தைப் பார்த்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினார். ஊரானது சேரி என்றும் ஊர் என்றும் எவ்விதம் பிரித்துவைக்கப்பட்டிருக்கிறதோ அவ்விதமே இலக்கியமும் ஊர் இலக்கியம், சேரி இலக்கியம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருப்பதாக மதிவண்ணன் சாடினார். ஏகாதிபத்தியங்களின் அடக்குமுறை அரசியலைப் பற்றித் தன் கவிதைகளில் பேசும் யவனிகா, ஏன் உள்ளுரில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்தோ, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்தோ குரலெழுப்பவில்லை என்று கேட்டார். உடலையும் காமத்தையும் கொண்டாடுவது மட்டும்தான் பின்னவீனத்துவமா…? சமூக அடக்குமுறை, சாதி ஒடுக்குமுறை பற்றிக் கேள்வி கேட்காமல் புலன்களை மட்டும் கொண்டாடுவது எவ்விதம் தகும்? இத்தகைய காரணங்களால் அவரது கவிதையில் இருப்பதாக மற்றவர்களால் சொல்லப்படும் அரசியல்தன்மையைத் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். வேசிகள் போன்ற பதங்களைப் பிரயோகிப்பதன் வழியாக தான் ஒரு ஆண் என்பதை அடிக்கடி நிரூபணம் செய்கிறார் என்றும் சொன்னார். ஆத்மாநாம்தான் அரசியல் கவிதைகளின் 'அத்தாரிட்டி' என்று அ.மார்க்ஸ் சொல்வதை நான் மறுக்கிறேன் என்றார் மதிவண்ணன். அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவுமான விவாதங்கள் களைகட்டின. மதிவண்ணனுடைய அதீத கோபத்தின் பின்னாலிருக்கக்கூடிய துயரத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கரிகாலனை நோக்கி மதிவண்ணன் எழுப்பிய கேள்விக்கு அவர் பொறுமையோடும் பொறுப்போடும் பதிலளித்தமையால் பெரிய சச்சரவிலிருந்து அக்கூட்டம் தப்பித்து முன்னகரமுடிந்தது. ‘கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்’என்ற தொகுப்பைப் பற்றி க.மோகனரங்கன் கட்டுரை வாசித்தார். கிராமங்கள் நகரமயமாக்கப்படுதலின் வலியை கரிகாலன் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதாக அவர் சொன்னார். அடையாளங்கள் மற்றும் அறச்சிக்கல்களைப் பேசும் கரிகாலனது கவிதைகள், கலாப்பிரியாவுக்கு அடுத்தபடியாக சித்திரத்தன்மையுடன் கூடியதாக அமைந்திருப்பதாக மோகனரங்கன் குறிப்பிட்டார். தன் எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான இடைவெளிதான் ஒரு கவிஞன் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால்… அதைக் கரிகாலன் சரியாக எதிர்கொண்டிருப்பதாகப் பாராட்டினார். எஸ்.தேன்மொழியின் ‘துறவி நண்டு’தொகுப்பினை விஷ்ணுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார். பெண்ணைக் குறித்தும் அவளது எண்ணங்கள் குறித்தும் ஆண்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் போய், பெண்ணே தன்னைப் பற்றி எழுத ஆரம்பித்ததானது ஆண்களைப் பதட்டம் கொள்ளவைத்ததாக சரவணன் சொன்னார். குறிப்பாக கவிதைகளில் பெண் கவிஞர்களின் ஆளுமையுடைய முன்னகர்வு ஆண்களை அச்சங்கொள்ள வைத்ததாகவும் குறிப்பிட்டார். தேன்மொழியின் கவிதைகள் உரையாடல்தன்மை பொருந்தியவையாகவும் ஒன்றுடன் மற்றொன்று சக்கரத்தன்மையுடைய தொடர்ச்சியைக் கொண்டிருப்பவையாகவும் தன்னால் அடையாளங்காண முடிந்தது என்றார். பெண்மையை எதிர்ப்பற்ற உருவமாக வைக்க தாய்மை பயன்படுகிறது என்ற இடத்தில் பெரியாரை மேற்கோள் காட்டிப் பேசினார். தாய்மை என்ற விடயத்தின் மேல் புனிதச்சாயம் பூசப்படுவதன் வழியாக பெண்களை மறைமுக அடிமைகளாக்கும் சதியினைச் சமுதாயம் செய்துகொண்டிருப்பதை தேன்மொழியின் கவிதைகளிலும் காண வாய்த்ததாக சரவணன் குறிப்பிட்டார். ஆண்மைய சிந்தனையிலிருந்து பெண்களால் முற்றிலும் விடுபட முடியாமலிருப்பதற்குரிய உதாரணங்களாக தேன்மொழியின் ‘இழிந்த இரத்தம்’, ‘கவிச்சி வாடை’போன்ற சொற்களைச் சுட்டிக்காட்டினார். ‘கடலுக்குச் சொந்தக்காரி’என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட மரகதமணியின் கவிதைகளைக் குறித்து எஸ்.தேன்மொழி கட்டுரை வாசித்தார். ‘கடல் குறித்த உயில்’ என்று வழக்கமான தனது பாணியில் குறிப்பிட்ட தேன்மொழி, கடலைச் சொந்தங் கொண்டாடுதல் என்பது வாழ்க்கையை நேசித்தல் என்றார். தொலைந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முன் நம்மை அடையாளப்படுத்தும் குரலாக மரகதமணியின் கவிதைகளைப் பார்ப்பதாகச் சொன்னார். பெண் மொழி உடலை அரசியலாக்கிப் பேசியது தேக்கநிலைக்குச் சென்றுவிட்டதாக தேன்மொழி ஆதங்கப்பட்டார். மரகதமணியின் தொகுப்பில் மொழிச்சிக்கல் தொகுப்பெங்கும் விரவிக்கிடப்பதைக் காணமுடிந்ததாகவும், சமூகக் கரிசனை கூர்தீட்டப்படவில்லை என்றும் விமர்சித்த தேன்மொழி இனிவருங்காலத்தில் அவை கவனத்திற்கெடுக்கப்பட்டு நிரப்பப்படல் வேண்டுமென்றார். இதனிடையில் மதிவண்ணனின் விமர்சனத்திற்கெதிரான விமர்சனமொன்றை சல்மா பிரியதர்சன் முன்வைத்தார். அதாவது, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’தொகுப்பை ஒற்றைமையப் பார்வையோடு அதாவது தலித்தியப் பார்வையோடு மதிவண்ணன் அணுகியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு மதிவண்ணன் பதிலளிக்கையில், ‘சாதி ஒழிப்பைப் பேசாத ஒரு கவிதை அரசியல் கவிதையாக எப்படி இருக்க முடியும்…? சாதியொழிப்பைப் பேசாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து என்ன பயன்?’என்று கேள்வியெழுப்பினார். இலக்கியத்திலும் ஒரு சாதியச் சதி நடப்பதாக அவர் கொதித்துப்போய்ச் சொன்னார். அதையடுத்து வந்த விவாதங்களுடன் ‘கமலாதாஸ் அரங்கம்’நிறைவுபெற்றது. அன்றைய இரவைக் கொண்டாட்டத்திற்குக் கொடுத்தோம். ‘மகாகவி’இசையும் சரவணனும் நானும் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’என்ற இசையின் பேச்சை வெகு சுவாரசியத்தோடு நானும் சரவணனும் கேட்டுக்கொண்டிருந்தோம். காலையில் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சொன்னார் “திரும்பத் திரும்பப் பேசினாலும் நான் உண்மையைத்தானே பேசினேன்”என்று. நாங்கள் உறங்கச் செல்லும்போது நள்ளிரவு இரண்டரை மணி.-------நாங்கள் தங்கியிருந்த அறையினுள் தட்டுமுட்டுச் சாமான்கள் போடும் குட்டி அறையொன்று இருந்தது. கட்டிலில் இடிபட்டு உருளவிரும்பாது அந்த அறைக்குள் ஒரு துணியை விரித்து கோழிபோல கொடுகிப்போய் நாலரை மணிநேரம் தூங்கி எழுந்திருந்து வந்தால், சிலரைத் தவிர எவரும் எழுந்திருக்கவில்லை. ஆற்றுக்கு குளிக்கப் போனவர்கள், சாப்பிடப் போனவர்கள், இன்னமும் எழுந்திருக்காதவர்கள் எல்லோரும் தயாராகிக் கிளம்பும்போது மதியமாகிவிட்டது. எப்போதும் மண்டபங்களுள் மூச்சுத் திணறி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மாற்றாக, நதிக்கரையோரத்தில் கவிதை வாசிக்கலாம் என்ற யோசனை உவப்பாகவே இருந்தது. நாங்கள் உயர உயரப் போனோம்…. போனோம்… தேயிலைச்செடிகளின் பசுமை கண்குளிர்த்தியது. ‘இங்கயும் கவிதை படிக்க (படுத்த) வந்துவிட்டார்களா?’என்பதுபோல குரங்குகள் பார்த்தன. பேருந்து வீதியில் நிறுத்தப்பட்டு நாங்கள் நதிக்கரையைத் தேடி நடந்தபோதுதான் அது எவ்வளவு ‘அபாயகரமான கவிதை வாசிப்பு’என்பது புலனாக ஆரம்பித்தது. ஏற்ற இறக்கமான நிலப்பரப்பில் மெலிந்த ஒற்றையடிப்பாதை, கீழே பெருகிச் சுழித்து நதி பாய்ந்துகொண்டிருக்க- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்த- பலகைகள் உடைந்து ஆடும் தொங்குபாலம், பிடிமானமற்ற சறுக்குப் பாறைகள், காலை இழுத்துச் சரிக்கக் காத்திருக்கும் பாசிபடிந்த கற்கள்… இவைதாண்டி சிலுவைப்பாதை முடிந்த இடத்தில் அழகான காட்சியொன்று விரிந்தது. பாறைகளில் நீர் விழுந்து வெள்ளை நுரையோடு சலசலத்து விரைந்தோடும் ஒயிலில் மனங்கிறங்கியது. சூழநின்ற மரங்களும் காற்றில் கலந்திருந்த குளிரும் கனவில் எழும் ஓசைபோன்ற அந்தச் சத்தமும்… அந்த இடமே ஒரு கவிதையைப் போலத்தான் இருந்தது. எங்கள் கவிதைகளை வாசிப்பதனால் அச்சூழலின் தவங்கலைந்து போகுமென்றொரு எண்ணம் தோன்றி மறைந்தது. ஓடும் நீரில் காலளைந்து திளைத்தபோது காலகாலமாக அங்கேயே இருந்துவிடத் தோன்றியது. கனவின் பாதைகள் எப்போதும் கனவிலேயே முடிந்துவிடுகின்றன. 14ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில் வால்பாறை நதிக்கரையில் ‘ராஜமார்த்தாண்டன் அரங்கம்’களைகட்டியது. ஆரம்ப நிகழ்வாக மோகனரங்கன் கவிஞர் ராஜமார்த்தாண்டனைப் பற்றிப் பேசினார். ‘கொங்குதேர் வாழ்க்கை’தொகுப்பை ராஜமார்த்தாண்டன் கொணர்ந்தபோது எழுந்த சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். கவிதையோடு கவிதைக்காக நிறைய ஆண்டுகளைச் செலவிட்டவர் எனினும், அத்தகைய பெருமைகள் எதனையும் இளையவரிடத்தில் காட்டாமல் எல்லோருடனும் சர்வசாதாரணமாக நட்புப் பாராட்டக்கூடியவர் ராஜமார்த்தாண்டன் என்று சிலாகித்தார். ராஜமார்த்தாண்டனின் ‘புதுக்கவிதை வரலாறு’என்பது எழுதவரும் புதியவர்களுக்குக் கைகாட்டக்கூடிய சிறந்த படைப்பு எனக் குறிப்பிட்ட மோகனரங்கன், அவருடைய மரணம் தமிழிலக்கியத்திற்குப் பெரும் இழப்பு என்றார். அடுத்து, ஜி.எச்.ரசூல் சல்மா பிரியதர்சனின் ‘தெய்வத்தைப் புசித்தல்’கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனக் கட்டுரையை வாசித்தார். கனவின் உடைபடலைக் குறியீடாக்கிக் கவிதைகளை எழுதியவர் சல்மா எனச்சொன்னார். குடும்பம் என்ற நிறுவனத்திற்கெதிரான உரத்த குரலை அவருடைய கவிதைகளில் கேட்கமுடியும் என்றார். பிரதி முழுவதிலும் அலையும் சாவு பற்றிய குறிப்புகள், குழந்தைகளின் உலகம், எல்லாவற்றையும் நேரடியான ஒன்றாக இல்லாமல் புனைவு கலந்த ஒன்றாகப் பேசும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். பெருங்கதையாடல்களைத் தகர்க்கவேண்டியதன் அவசியம் பற்றிப் பெரிதும் பேசப்படும் சூழலில் சல்மா கண்ணன்-ராதா போன்ற பிரதிமைகளுள் மீண்டும் நுழைவது விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டியது என்றார். களைப்பு தூரத்து மழையெனக் கவிவதை உணரமுடிந்தது. தொடர்ந்து பல மனஅயர்ச்சிகளுக்கு ஆளானதால் நான் மட்டும் அதை உணர்ந்தேனா…? உண்மையிலேயே மழைத்துளிகள் விழ ஆரம்பித்திருந்தன. மழையைத் தேடித் தொடர்ந்திருந்த வேட்கை தீர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை’தொகுப்பிற்கான விமர்சனத்தை எழுதிவந்திருந்த இளஞ்சேரல் அவசர வேலைநிமித்தம் ஊர்திரும்பிப்போயிருந்த காரணத்தால், அந்தக் கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். தண்ணீரின் இரைச்சல் அவருடைய மெல்லிய குரலை மூழ்கடித்தது. அவர் வாசித்ததிலிருந்து ஒரு விடயம் மட்டுமே என்னால் கிரகிக்க முடிந்தது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சமூகம் குறித்த அதிருப்தியையும், வாழ்வின் மீதான எள்ளல் கலந்த குற்றச்சாட்டையும் கொண்டிருந்தன. ‘காயசண்டிகை’எனது அடுத்த வாசிப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. வாசித்துவிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன். அழகிய பெரியவனின் ‘உனக்கும் எனக்குமான சொல்’கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தை யாழன் ஆதி வழங்கினார். மொழிசார்ந்த மௌனமும் அதிகாரத்தின் வெற்றியாகிறது என்றார். அதிகாரத்தினின்றும் அடையாளங்களை மீட்கும் பணியைச் செய்யவேண்டிய கடப்பாடு எழுதுகோல்களுக்கு உள்ளதென்றார். அழகிய பெரியவனின் கவிதைகள் அறிவுஜீவித்தனமான சொற்களின் கட்டுமானம் அல்ல, அவரது வாழ்வனுபவங்களிலிருந்து பெற்ற எளிமையான அறிவிலிருந்து பிறந்தவை அவை என்றார். ‘நீ’, ‘உன்’ போன்ற முன்னிலை விளித்தல்களால் அழகிய பெரியவனின் கவிதைகள் நவீன மொழியிலிருந்து சற்றே பின்தங்கியவைபோல தோற்றங்காட்டுவதாகக் குறிப்பிட்டார். கவிதைகளில் கதையைச் சொல்லிச் செல்லும் தன்மையானது, அதன் வடிவங் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இருப்பதாக யாழன் ஆதி கூறினார். வீடு திரும்பும் அவரவர் கவலைகள் மழையென மூடிக்கொண்டிருக்குமொரு தருணத்தில், ‘மீதி அமர்வை தங்குமிடத்திற்குத் திரும்பி அங்கே வைத்துக்கொள்ளலாமென்று’ ஆலோசனைக்கிணங்க நாங்கள் மீண்டும் அபாயகரமான பாதையைக் கடந்து அறைக்குத் திரும்பினோம்.நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டிருந்தது. இன்னொரு அமர்விற்கான பொறுமை தீர்ந்துபோயிருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் போல அவரவர் திசையில் சிலர் சிதறிப்போயிருந்தபடியால் திட்டமிட்டபடி நேரத்தைக் கையில் வைத்திருக்கமுடியாமல் போனது. யாரும் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவும் முடியாத சூழல். அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’தொகுப்புக்கான விமர்சனத்தை சல்மா பிரியதர்சன் வாசிப்பதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக அந்த விமர்சனக் கட்டுரை வாசிக்கப்படவில்லை. அதே நிலைதான் இளம்பிறையின் ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’தொகுப்புக்கும் நேர்ந்தது. இளம்பிறையின் கவிதைகளை விமர்சிக்க வந்திருந்த கம்பீரனும் கட்டுரையை வாசிக்காமலே திரும்பவேண்டியதாயிற்று. தமிழ்நதியின் (என்னுடையதே) ‘சூரியன் தனித்தலையும் பகல்’தொகுப்பைப்பற்றி விமர்சனக் கட்டுரை வாசிப்பதாகச் சொல்லியிருந்த ‘புது எழுத்து’மனோன்மணி 14ஆம் திகதி காலையாவது வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசிவரை அவர் வரவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவருடைய ஊரிலிருந்து வந்திருந்த சாஹிப் கிரண் ‘திடீர் உடல்நலக்குறைவால் மனோன்மணி பங்கேற்கவில்லை; ஆனால், கட்டுரையை ஏற்கெனவே எழுதிவைத்திருந்தார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்தப்படவிருக்கும், ஈழத்தமிழ் கவிதைகள் தொடர்பான விமர்சனக்கூட்டத்தில் அந்தக் கட்டுரை வாசிக்கப்படவிருக்கிறது. அதில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களிடம் கூட்டம் பற்றிக் கருத்துக் கேட்டபோது, பெரும்பாலானோர் நேரம் சரிவரக் கையாளப்படவில்லை என்ற கருத்தையே தெரிவித்தனர். மற்றபடி அதுவொரு இனிமையான ஒன்றுகூடல்தான். கவிதை தொடர்பாக எனது மண்டைக்குள் புதிதாக ஏதாவது ஏறியிருக்கிறதா என்று தட்டிப்பார்த்தேன்…ம்கூம்… நிறைய நண்பர்கள்தான் தேறியிருந்தார்கள். இருள் படர்ந்த கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தபோது, வெப்பத்தை நோக்கிய பயணம் என்ற எண்ணம் தோன்றி அச்சுறுத்தியது. வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது
- பிற்குறிப்பு: அந்த விமர்சனக் கூட்டத்தைப் பற்றி பலவாறான விமர்சனங்கள் நிலவுவதாக அறிகிறேன். அவரவர் வசதிக்கும் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் புறணி மனோபாவத்திற்கும் ஏற்ப கொஞ்சம் ‘சரக்கு’சேர்த்துப் பெருப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்லமுடியும்.
Labels: நிகழ்வுகள், வால்பாறை இலக்கியக் கூட்டம்
posted by தமிழ்நதி
www.tamilnathy.blogspot.com
Free counter
Subscribe to:
Posts (Atom)









