Wednesday, October 22, 2008

சொல்


மலை என்றான்.
உயரமாக இருந்தது
அந்தச் சொல்
கிணறு என்றான்.
ஆழமாக இருந்தது
ஏதேனும் ஒன்றின் மேலிருந்து
குதிக்கப் போகிறேன் என்றான்.
அவனைக்
காப்பற்றும் சொல்லைத்தேடினேன் .
நினைவில் வரவேயில்லை
அமைதியாகிவிட்டது யாவும்
ப்ளப் .... ப்ளப் .... ளப்..
முட்டை முட்டையாய் வந்தது
கிணற்றுக்குள்ளிருந்து .
இப்போது நினைவில் வந்துவிட்டது
அவன் எங்கே?

(உயிரோசை :இணைய இதழ் :7 )

No comments: