Thursday, October 23, 2008

மடாலயம்


மடாலயத்தின்கதவுகள்
திறந்துகிடக்கின்றன
உள்ளேஎல்லோரும
கண்களை மூடித்
தியானிக்கின்றனர்.
பிறகு
எல்லோரும்போய்விட்டனர்.
மடாலயம்
ஆழந்து தியானிக்கிறது
கதவென்னும்தன்
அகன்ற கண்களை மூடியபடி.

( காலச்சுவடு :இதழ் .97 ல் வெளியானது )

No comments: