Wednesday, October 22, 2008

தேநீர்


நீ கலந்த
இந்தத் தேநீர்
இப்படி இருக்கக் கூடாது.
தேயிலையை
இன்னும் கொஞ்சம்
கொதிக்க விட வேண்டும் .
அதில் கொஞ்சம்
மணக்கும் ஏலம் கலந்து ...

சொன்னது போதும்.
நீயொரு
புதிய தேநீர் தயாரித்துக் கொடு
.

(உயிரோசை :இணைய இதழ் :7 )

No comments: