Saturday, June 20, 2009

போகிறேன்




இந்த நாற்காலி ஏற்கனவே அமர்ந்திருக்கிறது


அதன் மடிமேலேறி அமர்கிறேன் .


சாவகாசமாய் தன்னைப் பரப்பிப் படுத்திருக்கும்


மெத்தையின் மேல் குப்புறக் கவுத்துகிறேன் என்னை .


ஓயாது நடந்து கொண்டேயிருக்கும்


சாலையின் மேலேறிப் போகிறேன் .


போகிறேன் ....போய்க்கொண்டேயிருக்கிறேன்


ஒரே சமயத்தில் நேராய் ,தலை கீழாய் ...


இன்னும் எப்படியெல்லாமோ தன்னை இருத்தியிருக்கும்


கல்லை சற்று நகர்த்திப் போட ...


போக ..போக


கல் பெரிய மலையாகிக் கொண்டிருந்தது .

No comments: