Saturday, January 31, 2009

கண்டன கவிதைப்போராட்டம்

karthik J December 21, 2008 10:12 PM PST நன்றி
ஊடறு இக்குறிப்பை ஊடறுவில் பிரசுரித்தமைக்கு. புலம்பெயர் நாட்டில் தான் மிகக் கேவலமாக பெண்கள் சந்திப்பு போன்றவற்றை விமர்சித்து கொச்சைப்டுத்துகிறார்கள் சில புறம்போக்குகள் என்றால் இக்கண்டன கவிதைப்போராட்டத்தையும் சிலர் கொச்சையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் இவர்களுக்கு வேற வேலையே இல்லை இவர்களால் ஒரு ம--- ?? புடுங்கத்தெரியாது ஆனால் (இந்த வார்த்தையை பாவிப்பதற்கு மன்னிக்கவும் ஊடறு) யாராவது முன்னின்று செய்தால் அதற்கு புடுங்கத் தொடங்கி விடுவார்கள். பெரியாரைப் பற்றி பதிவு போடும் பெண்கள் என்று சொல்லக்கொள்ளும் சில பேமாளிகள் உட்பட இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது அது தான் இவர்களின் பலவீனம் நீங்கள் மௌனமாக இருந்து உங்கள் வேலைகளை பாருங்கள். அது தான் இன்றைக்கு தேவையான விடயம் இந்தக் கண்டனக்கவிதைக்கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. இப்பொழுது இந்தப்பதிவை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. வாழ்க பெண்கள் தொடர்ந்து ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்க என் போன்றவர்கள் உள்ளனர். என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கார்த்திக்
திருவண்ணாமலை

Thursday, January 22, 2009

அ-கடிதங்கள்


அ-கடிதங்கள்

-----------------

இலக்கமற்ற வீட்டிற்கு

நிறையகடிதங்கள்வந்துசேர்கின்றன.

காகிதமற்று,உறைகளற்று,

எழுத்துகளற்று,வார்த்தைகளற்ற

அ- கடிதங்களை

உருவமற்ற ஒருவன் / ள்

வாசிக்கிறான் / ள்.

பின்னவற்றை வேலைப்பாடு மிகுந்த

காற்றில் பின்னப்பட்ட பையொன்றில்

சேகரித்தபடி இருக்கிறான் / ள்

காலத்திற்கும் .

puthiyaparvai -dec2008

மரமற்ற இடமேது ?


மரமற்ற இடமேது ?

-------------------------

கிளையற்ற மரமொன்றை கண்டேன்

மரமற்று ,கனியற்று இருந்தது

விதையற்று வளர்ந்திருந்தது அம்மரம் .

வளர்வது மட்டும் இயல்பென்று .

வளர்வதெல்லாம் மரமென்றால்

மனமும் மரமன்றோ ?

வளராத ஏதோவொன்று சொல் ?

வளர்வதெல்லாம் மரமென்றால் மரமற்ற இடமேது ?
puthiyaparvai -dec 2008

Saturday, January 3, 2009

அ-கவிதை


அ-கவிதை

--------------

மேல்,கீழுமற்ற உலகில்

இறந்த ,நிகழ், வருங்காலமற்ற
ஒரு நாளில் பிறந்தேன்.

இருள்,வெளிச்சம் இரண்டுமற்ற பொழுதில்

கவிதையொன்றை எழுதி வைத்தேன்.

துக்கமும், சந்தோசமுமற்ற வாழ்நிலைப்பற்றி

அது இருக்கட்டும் அதை நீங்கள்

எந்த காலத்தில் அமர்ந்து

வாசித்தீர்கள்,

வாசித்துக் கொன்டிருக்கிறீர்கள்,

வாசிப்பீர்கள்

pithiaparvai - jan2009 issue