Thursday, March 5, 2009

நெடிய சுவர்..


நெடிய சுவர்..

நீயொரு செங்கல்

நானொரு செங்கலென

மாற்றி மாற்றி அடுக்கி வைத்து

எழுபியாயிற்று நம்மிருவருக்குமிடையே

நெடிய சுவரொன்றை.

சமரசம் செய்ய முயன்றவர்கள் முன்னிலையில்

ஒப்புதல் அளித்துவிட்டோம்

சுவரற்ற வாழ்வை வாழ்வதாய்..

ஆனால் முதலில் நீக்க வேண்டும்

உன் முதல் செங்கலை.

No comments: