Thursday, March 5, 2009

யுத்ததிற்கு பின்



யுத்ததிற்கு பின்


-------------------


மருத்துவமனையில்


என் கால்களை வேறொருவன்


கையில் ஏந்தி வந்தான்


இந்தா...


பொருத்திக்கொள் என்றான்.


முன்பிருந்த கால்களைவிட


அது வேறு நிறமானது ...


வலிமையானது...


இரத்த நாளமற்றது..


தவிர தேவையற்ற பொழுதுகளில்


தனியே கழட்டி வைக்கவும் ஏதுவானது .
படுக்கை அறையில்


வாசிக்கும் பொழுதும்


தேநீர் அருந்தும் பொழுதும்


துயிலும் பொழுதும்


சுவரில் சாய்ந்தபடி


என் கால்கள் என்னை வேடிக்கைப்பார்கின்றன ..
குளியல் அறையில்


வினோதமான குளியல்


குளியலறைக்கு உள்ளே தாளிட்டு நானும்


வெளியே என் கால்களுமிருக்கின்றன.


.மிதியடிகள்


தேவையற்ற ஒன்றாகி விட்டது.
ஒருமுறை எண்ணைக்கான வந்த


என் நண்பன் ச்ரித்தபடியே சொன்னான்


உண் வாழ்வை விட


உன் மரணமொரு வினோத நிகழ்வாயிருக்கும்


விட்டதில் சுருக்கிட்டு


நீ தற்கொலை செய்துகொள்வாய் எனில்


அந்தரத்தில் உன் உடல் மட்டும் தொங்கியபடியும்


தரையில் உன் கால்கள் பதிந்தபடியும்


நீ இறந்து கிடப்பாய்.


நோய் வாய்த்து நீ மரணித்துவிட்டால்


உன் உடலை எரித்தோ ,புதைத்தோ


விட்டு வந்தாலும்


வீட்டில் உன் கால்கள் மட்டும் சுவரில் சாய்ந்தபடி


தனித்திருக்கும்


மிஞ்சியிருக்கும்


உன்னை நியாபகமூடியபடியே ........

No comments: