Thursday, March 12, 2009

லசந்தா விக்ரமதுங்க....





லசந்தா விக்ரமதுங்க....




கடந்த சில நாட்களாய் பேசப்படும் ஒரு பெயர்...தமிழர்கள் மரியாதையுடன் உச்சரிக்கும் பெயர் லசந்தா விகரமதுங்க.... அவர் கொடுரமான முறையில் தான் கொல்லபடுவோம்மென்று உணர்ந்து கடைசியாய் ஒரு 'மரண சாசனத்தை ' எழுதி வைத்துவிட்டு தமிழர்களுக்காய் உயிர் தியாகம் செய்த சிங்கள மாவீரன்.....மஹிந்தா ராஜபக்க்ஷேவின் 25 ஆண்டு கால நண்பர்... 'சண்டே லீடர் 'என்ற நடு நிலை பத்திரிக்கையின் ஆசிரியர்...

ஒவ்வொரு பத்திரிகையாளரும் முன் மாதிரியாக கொள்ளவும்,ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லவும் காரணமான ஒரு அற்புதமான மனிதர்..
தற்கொலை செய்து கொள்ளும் பலர் கடைசி கடிதம் எழுதுவார்கள்... கேட்டிருக்கிறோம்... கொலை செய்யபடுவதை உணர்ந்த அவர் எழுதிய 'மரண சாசனம் ' என்ற அவரின் கடைசி கடிதத்தை அவர் பணி புரிந்த சண்டே லீடர் என்ற பத்திரிக்கை அவர் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு வெளியிட்டுள்ளது...

அவர் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் சிங்கள அரசின் கபட நாடகத்தை ,ராஜபக்க்ஷேவின் கொடுர முகத்தை உலகத்திற்கு வெளிக்காட்டியது தான்....உலகத்தமிழர்கள் ஒன்று கூடி பலத்த குரலில் 'தமிழினம் அழிவதை தடுத்து நிறுத்துங்கள் ' என்று கதறியபோது யார் காதிலும் விழ வில்லை... இலங்கையில் நடக்கும் அழிவுக்கு எதோ தமிழன் மட்டும் காரணம் போல உலக சமாதான அமைப்புகளும் ( UNO ) மௌனமாய் இருந்தது... இன்று தமிழினம் அளிக்கபடுகிறது, அராஜகம் நடக்கிறது,அதை எழுதும் பத்திரிக்கையாளன் தாக்கபடுகிறான்,அழிக்கப்படுகிறான் , நாடு கடத்தப்படுகிறான், கொடுரமான முறையில் கொல்லபடுகிறான், என்ற பொழுது உலகம் திரும்பி பார்க்கிறது....ஜப்பான் ,ஜெர்மன் போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... செஞ்சிலுவை சங்கம் கூறிய 'மனித உரிமை மீறல் நடக்கிறது ' என்ற வார்த்தைகளை ஒருவழியாக UNO வழிமொழிகிறது...



லசந்தா விக்ரமதுங்க தனது இருதிக்கடிதத்தில் கூறுகிறார் " வன்முறை மட்டுமே நாட்டின் நடப்பாகிபோன பிறகு ,இன்று பத்திரிக்கையாளர்கள் நாளை நீதிமான்கள் அழிக்கபடுவார்கள்.. பிறகு நான் ஏன் இதை செய்கிறேன் ?? நானும் ஒரு கணவன், மூன்று குழந்தைகளின் தந்தை,பத்திரிக்கையோ, அல்லது வக்கில் தொழிலோ செய்யாது, இவளவு ரிஸ்க் எடுப்பது சரிதானா என்று ஆச்சர்யபடுகிறேன்...நண்பர்களோ பாதுகாப்பாக வக்கில் தொழிலை பார்க்கும்படி கூறுகிறார்கள்... அரசியல் நண்பர்களோ, எனக்கு வேண்டிய துறையில் மந்திரி பதவி கொடுப்பதாய் கூறுகிறார்கள்.. எனது நலம் விரும்பிகளோ நான் பாதுகாபற்ற முறையில் பத்திரிகையாளனாய் இருப்பதை விட பாதுகாப்பாய் அவர்கள் நாட்டில் வாழ உதவுவதாய் சொல்கிறார்கள்... என்றாலும் ,புகழ்,பதவி, அலுவலகம் , இதற்கும் மேலாய் எனது மனசாட்சியின் குரலுக்காய் இன்னும் இப்படியே....''என்கிறார் .

பல பிரச்சனைக்கு பின்னரும் ,எப்பேர்பட்ட நிகழ்வாயினும் சரி, உண்மையை ,ஆதாரத்தோடு வெளியிடும் பத்ரிக்கயாகவே இருந்துள்ளது சண்டே லீடர் இதழ்.. .. , மேலும் லசந்தா கூறுகையில் , '' தீவிரவாதம் வேரருக்கபடவேண்டும்.,பிரச்சனைகளை சரித்திர நோகோடு பாருங்கள், தீவிரவாதநோக்கோடு பார்க்காதீர்கள் என்று கூறிவந்தோம்.ஸ்ரீலங்கா ஒரு ஜனநாயக நாடாக வெளிப்படையான ஒரு நாடாக இருக்க வேண்டுமென்றும்,தீவீரவாதத்தை வேரறுக்க அரசாங்கமே தீவீரவாதத்தை கையிலேடுக்ககூடாதென்று கூறினோம்.. ''இலங்கை அரசு மட்டுமே உலகத்தில் தன் மக்கள் மீது குண்டு போடும் நாடு '' என்று நாங்கள் கூறியதற்கு கிடைத்த பட்டம் '' ராஜ துரோகி ''....( Sri Lanka is the only country in the world routinely to bomb its own citizens. ) என்று லசந்தா கூறியுள்ளது உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் மிக முக்கியமான ஒரு பதிவாகும்...

லசந்தாவின் வீட்டில் குண்டு மழை பொழிந்தது..குற்றவாளிகளை பிடிதுவிடுவதாய் அரசு பலமுறை உறுதி அளித்தாலும் இன்னுமும் குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பதே உண்மை என்று கூறும் அவர் உறுதியாக கூறுகிறார் ,'' இறுதியாக நான் கொல்லப்பட்டால் ,அரசு தான் என்னை கொன்றிருக்கும்.''

''மஹிந்தா ,எனது மரணத்திற்கு பின்னர் நீங்கள் வழக்கமான உத்தரவுகளை பிறப்பித்து விசாரிக்க சொல்லக்கூடும் ,என்றாலும் ,முன்னர் பலமுறை நீங்கள் செய்த விசாரணையில் விடயம் எதுவும் வராதது போலவே இப்போதும் வராது..ஆனால், என்னை கொல்லப்போகிரவர்களை எனக்கும் தெரியும் ,உமக்கும் தெரியும்...உம் நலன் கருதி நான் சொல்லவில்லை..'' என்கிறார் .


லசந்தா ,மஹிந்த ராஜபக்க்ஷேவின் 25 வருட கால நண்பர் என்பது பலருக்கு தெரியாது என்றும், மஹிந்தா என்ற முதல் பெயர் சொல்லியும் ,வெகு சிலர் மட்டுமே விளிக்கும் 'ஓயா' (oya ) என்றும் கூப்பிடவும், நண்பர்களோடு இரவு நேரத்தில் மஹிந்தா வின் இல்லத்தில் சந்திக்கும் உரிமை உள்ள இவருக்கே இந்த நிலை என்றால், ஈழத்தில் நடக்கும் விஷயங்களை சொல்ல யார் முன் வருவார்கள்??


சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள் நாலு மனிதர்கள் வந்து லசந்தாவை கொடூரமாக கொலை செய்தபின் , இலங்கையின் முக்கிய எழுத்தாளர்கள், லங்கதீப பத்திரிக்கையின் உபுல் ஜோசப் பெர்னாண்டோ, ரத்னபாலா கமகே,சண்டே டைம்ஸ் ,இக்பால் அதாஸ், அனுராத லோகப்புரட்சி போன்றோர் வெளிநாடு சென்ற விட்டார்கள்.

உண்மைகளை எழுதுவதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் மேலும் பலர் பலியாகலாம் என்கிறார் லசந்தா..கொடூரமாக கொலைசெய்யப்படுவது சுதந்திரத்தின் தோல்வியாகாது என்பது லசந்தவின் கருத்து.. இவ்வளவு இன்னல்களுக்கு நடுவே, கொலை செய்யப்படுவோமென்று தெரிந்தும் ஏன் லசந்தா பத்திரிக்கை துறையில் இருந்தார் என்ற கேள்விக்கு மிக உண்மையான, உன்னதமான பதிலை சொல்லியிருக்கிறார்..
யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய கொடுமையான தாக்குதல்களை கண்ட மார்டின் முல்லர் எழுதிய கவிதையை தனது பால்யத்தில் படித்த லசந்தா, தனது இறுதி கடிதத்திலும் பதிவு செய்துள்ளார் ..


முதலில் அவர்கள் யூதர்களுக்காய் வந்தார்கள்



நான் பேசவில்லை ,



ஏனெனில் நான் யூதனில்லை.



பின்னர் பொது உடமைவாதிக்காய்,



வந்தார்கள் நான் பேசவில்லை ,



ஏனெனில் நான் பொதுடமைவாதியில்லை



தொழிற்சங்கவாதிக்காய் வந்தார்கள்



நான் பேசவில்லை,



ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை



பின்னர் எனக்காய் வந்தார்கள்



எனக்காய் பேச அங்கு எவருமே இல்லை.....


தமிழர்களுக்காய் குரல் கொடுக்க பலர் முன்வந்த போதிலும் சிங்கள அரசின் கொடுமைகளை உலகிற்கு சொன்ன லசாந்தா விக்ரமதுங்கவின் செயல் உலகை திரும்பி பார்க்க வைத்திருப்பது உண்மை.--
UYIRMMAI-FEB '2009 ISSUE

No comments: