
அ-கவிதை
--------------
மேல்,கீழுமற்ற உலகில்
இறந்த ,நிகழ், வருங்காலமற்ற
ஒரு நாளில் பிறந்தேன்.
ஒரு நாளில் பிறந்தேன்.
இருள்,வெளிச்சம் இரண்டுமற்ற பொழுதில்
கவிதையொன்றை எழுதி வைத்தேன்.
துக்கமும், சந்தோசமுமற்ற வாழ்நிலைப்பற்றி
அது இருக்கட்டும் அதை நீங்கள்
எந்த காலத்தில் அமர்ந்து
வாசித்தீர்கள்,
வாசித்துக் கொன்டிருக்கிறீர்கள்,
வாசிப்பீர்கள்
pithiaparvai - jan2009 issue

No comments:
Post a Comment