Saturday, January 3, 2009

அ-கவிதை


அ-கவிதை

--------------

மேல்,கீழுமற்ற உலகில்

இறந்த ,நிகழ், வருங்காலமற்ற
ஒரு நாளில் பிறந்தேன்.

இருள்,வெளிச்சம் இரண்டுமற்ற பொழுதில்

கவிதையொன்றை எழுதி வைத்தேன்.

துக்கமும், சந்தோசமுமற்ற வாழ்நிலைப்பற்றி

அது இருக்கட்டும் அதை நீங்கள்

எந்த காலத்தில் அமர்ந்து

வாசித்தீர்கள்,

வாசித்துக் கொன்டிருக்கிறீர்கள்,

வாசிப்பீர்கள்

pithiaparvai - jan2009 issue

No comments: