Thursday, March 5, 2009

ஏவாள் ஒ ஏவாள்..



ஏவாள் ஒ ஏவாள்..


( தஸ்லிமா நஸ்ரின் )


ஏவாள் ஏன் அந்த கனியை புசித்திருக்ககூடாது?


அக்கனியை எட்ட அவளுக்கு கைகளில்லையா?


பரிப்பதற்க்குதான் விரல்களில்லையா?


பசியை உணர ஏவாளுக்கு வயிறுதானில்லையா?


தாகத்தை உணர நாக்கோ


காதலை உணர இதயமோயில்லையா?


நல்லது...பிறகு ஏன் ஏவாள் அந்தகனியை உண்ணகூடாது?


ஏன் அவளது ஆசைகளை புதைத்து வைக்க வேண்டும்?


பாத அடிகளை ஒழுங்கு படுத்தி தாகத்தை மட்டுப்படுத்த வேண்டும்?


ஏடன் தோட்டத்தில் ஆதாமுடன் இணைந்து உலாவ வேண்டுமென


ஏவாள் கட்டாயப்படுத்த பட்டிருக்க வேண்டும்?


ஏவாள் கனியை உண்டதனால்


நிலவு ,சூரியன்,நதி,கடல் உள்ளது.


மரங்களும்,செடிகளும் ஓயினும்கூட


கனியை உண்டதனாலேயே உள்ளது..


ஏவாள் கனியை உண்டதினால்


சந்தோசம் ,மகிழ்ச்சி,ஆனந்தம் ..


கனியை தின்று ஏவாள் சொர்கத்தை பூமியில் உருவாக்கினாள்...


ஏவாளே, மேலும் ஒரு கனி கிடைத்தால்


புசிப்பதை எப்போதும் நிறுத்தி விடாதே.


மொழிபெயர்ப்பு :இன்பா சுப்ரமனியன்


உயிரோசை.

post scrap cancel

No comments: