Tuesday, October 21, 2008

அர்த்தநாரி


ருத்ரமுர்த்தியின்

அர்த்தநாரி பிரதியை

கோடானுகோடி ஆண்டுக்கு முன்

பிழையாக வடிவித்து விட்டான்

தேவதச்சன் .

வலப்புறம் சிவனும்

இடப்புறம் உமையுமாய்

காலம் காலமாய்

வலப்புறம் கர்ப்பப்பையை

தாங்கிக்கொண்டிருக்கிறார்

ருத்ரமுர்த்தி .


நன்றி :(உயிரோசை - இதழ் .7)

No comments: