Saturday, October 25, 2008

சாவு பறவைகள்


எங்கிருந்தோ
இந்த சாவு பறவைகள் வருகின்றன
எளிய மரணத்தை தேடி.
கூர் அம்புகளில்,
கவன் கற்களில் ......
குறிபார்க்கிறார்கள்
அதன் மரணத்தை.
உயர்அழுத்த மின் கம்பிகளின்
நேர்க்கோட்டில் சந்திக்கிறது
அதன் இருப்பும், இருப்பின்மையும் .
சாவு பறவைகள் வீழ்கின்றன மண்ணில் .
அதன் றெக்கைகள்
காற்றில் அசைகிறது லேசாய் .
அவை
நிகழ்ந்த தம் மரணத்தை
தாமே தெரிவிக்கின்றன
எல்லோருக்கும் முன்பாக பகிரங்கமாய் இறந்து .

இன்னும் அவை
கிளம்பி வந்துக்கொண்டே இருக்கின்றன
எளிய மரணத்தை தேடி
எல்லா திசைகளிலிருந்தும் .

No comments: