Thursday, October 23, 2008

யாருமற்ற வீட்டில்

யாருமற்றுத் திறந்துகிடக்கும் வீட்டின்
மேசைமேல்
விரிந்து கிடக்கும்புத்தகத்தை
யாரோ
வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதன் அடுத்தடுத்தபக்கத்தைத்
திருப்பியபடியிருக்கிறார்கள்
யாரேனும் உள்ளேறும்அவ்வேளை
வெளியேறிவிடுகிறார்கள்
அவ்வறையைவிட்டு
திரைச்சீலை மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது.

(காலச்சுவடு இதழ் :91)

No comments: