Thursday, October 23, 2008

படகுத்துறை

எதிர்கரையில் நின்று

சைகைசெய்து அழைக்கிறான்.

படகுக்காரனை

நீர்த் துறையிலிருக்கும்

அத்தனை படகுகளும்

அவனைப் பார்த்தவாறிருக்கின்றன.

ஆனால்

படகுக்காரர்கள்யாரும்

அவனைப் பார்த்ததாய்த்தெரியவில்லை.

எதிர்பார்த்தலின்

சிறிய படகொன்று

ததும்பி... ததும்பி அசைகிறது

அவனை நோக்கி.


(காலச்சுவடு :இதழ் .97 ல் வெளியானது )

No comments: