Wednesday, July 22, 2009

உயிரோசை -ஜூன் இதழில் வெளியான கவிதை

வசந்த காலம்
உறவினர்கள் வந்து
தங்கிவிட்டுப்போன வீட்டை
கழுவிச் சுத்தப்படுத்துவது போல
குழந்தைகள் சிதறடித்த
விளையாட்டுப் பொருட்களை
அலமாரியில் அடுக்கி வைப்பது போல
வசந்த காலம்
முடிந்த நாளின் அதிகாலையில்
பூக்கள் மூடிக் கிடக்கும்
நகரத்தை
சுத்தம் செய்கிறார்கள்
துப்புரவுப் பணியாளர்கள் .

No comments: