Friday, December 12, 2008

நீர்ப்பூ


நீர்ப்பூ

--------

மழைப் பொழிகிறது

வீட்டின் கூரையிலிருந்து

சொட்டுச்சொட்டாய் விழுகிறது

மழைநீர் .

ஒவ்வொரு துளீயும்

பூமியைத்தொடும் பொழுது

பூவொன்றுத் தோன்றி அடங்குகின்றது .

யாராலும் எடுக்கவோ

எடுத்து சூடவோயியலாத

நீர்ப்பூவொன்று .

(உயிரெழுத்து - நவம்பர் 2008)

No comments: