Friday, December 12, 2008

இறுதி வார்த்தை


இறுதி வார்த்தை

-----------------------
வீரியமானதாய் இருக்கிறது விஷம்

நீர் குவளையிலிருந்த நீரனைத்தையும்

கீழே ஊற்றி விட்டேன் .

செல்பேசியைச் சிதைத்து விட்டேன் .

ஒரு சொட்டு எண்ணெய் இருக்கிறது

விளக்கில்

திரியின் நுனியில் இருக்கும் சுடர்

மங்கிக்கொண்டே வருகிறது .

இறுதிச் சொட்டிலிருக்கும்இந்தப்பேனாவால்

இன்னும் ஒரு வார்த்தைதான் எழுதலாம் .




எவருடைய பெயரையாவது எழுதிவைக்கலாம் .

என் சுயமரணத்திற்கு காரணமாய்

ஆனால் எனக்கு இப்போது

ஒரு கவிதை எழுதி வைக்கலாம் போலிருக்கிறது .

No comments: